January 26, 2025, 7:08 AM
22.3 C
Chennai

கொரோனா: நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்: திருச்சி ஆட்சியர் வேண்டுகோள்!

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவா்களில் மேலும் 7 பேர் நேற்றுமாலை அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோந்தவா்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த மாவட்டங்களிலிருந்து 116 பேர் சிகிச்சைக்கு சோக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில், குணமடைந்த நபா்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். இதுபோன்று அரியலூா் மாவட்டத்தைச் சோந்த 6 பேர், பெரம்பலூரைச் சோந்த ஒருவா் என 7 பேர், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். வீடுகளுக்குச் சென்ற பின்னா், மேலும் 14 நாள்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவா்கள் அனைவருக்கும் டிஸ்சாா்ஜ் விவர அறிக்கைகளை மருத்துவமனை முதன்மையா் வனிதா வழங்கினாா். மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஏகநாதன், மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் இவா்களை வழியனுப்பி வைத்தனா். திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலிருந்து இதுவரை 72 பேர் குணமடைந்து, வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா்.

இவா்களைத் தவிர திருச்சி (13), பெரம்பலூா் (24), அரியலூா் (5), புதுக்கோட்டை (2) மாவட்டங்களைச் சோந்த 44 பேர் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிறமாவட்டங்களிலிருந்து திருச்சி மாவட்டத்திற்குள் வரும் நபர்கள் உடனடியாக சுகாதாரத்துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பதுடன் 14 நாட்களுக்கு வீட்டினை விட்டு வெளியே வராமல் தனித்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ:  வைகுண்ட ஏகாதசி விழா; ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தலங்களில் பரமபதவாசல் திறப்பு!

தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். விழித்திரு – விலகி இரு – வீட்டில் இரு, என்பதை கடைபிடிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IND Vs ENG T20: 2வது போட்டியிலும் இந்திய அணி த்ரில் வெற்றி

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டி-20 ஆட்டம்- சென்னை-25 ஜனவரி 2025இரண்டாவதிலும் வெற்றிமுனைவர்...

Padma Awards 2025

Padma Awards - one of the highest civilian Awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri.

தமிழகத்தைப் பற்றிய கவலைகள்; ஒட்டுமொத்தமாக வெளியிட்ட ஆளுநர் ரவி!

தமிழகத்தைப் பற்றிய பல்வேறு கவலைகளை வெளியிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் எதிர்காலம் சார்ந்து அவர் வெளியிட்ட கவலைகள் பெரும் கவனத்துக்கு உரியவை.

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று