December 6, 2025, 2:13 AM
26 C
Chennai

உயரும் லாரி வாடகை! பொருட்கள் விலைவாசியும் உயரும் அபாயம்!

lorry

பல மாவட்டங்களில் சரக்கு லாரிகளின் வாடகை உயர்வால், பல பொருட் களின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்படவுள்ளதாக நுகர்வோர் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் 50 நாட்கள் பலரின் வாழ்வதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.ஊடங்கால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மாவட்ட எல்லைகள் பல நாட்கள் மூடப்பட்டது. இதனால் லாரி போக்குவரத்து அறவே முடங்கிப் போனது.

இதனால் கடும் பொருளாதார சரிவை அவர்கள் சந்தித்தனர். தற்போது ஊரடங்கு தளர்வால்,மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் லாரி போக்குவரத்து தொடங்கியுள்ளது.

ஊரடங்கு தளர்வுக்கு பின்புதான், மதுரையிலிருந்து- கேரளா, சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களுக்கு லாரிகளை இயக்க வாய்ப்பு கி்ட்டியுள்ளது. அதிலும் 50 சதவீத லாரிகள் மட்டுமே இயக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

அத்துடன் தொழில் நிறுவணங்கள் முழுமையாக இயக்க்ப்படாததால், வடமாநிலங்களுக்கு லாரிகள் இய.க்கம் தற்போது நடைபெறவி்ல்லை. ஆகவே தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்யும் வகையில் , டீசல் விலை உயர்வையும் சமாளிக்கும் பொருட்டு, லாரி வாடகையை 12 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர். இதனால் பல மாவட்டங்களில் அத்தியவசியப் பொருட்கள் விலை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், மதுரையில் பல இடங்களில் வெங்காயம், சோயா, எண்ணை விலையில் உயர்வு தென்பட்டது. விலை உயர்வால், பல இடங்களில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

lemon
lemon

மதுரையில் கடும் வெய்யிலால் எலுமிச்சம்பழம் விலை உயர்வு~

மதுரை நகரில் கடந்த சில நாட்களாக கடைகளில் எலுமிச்சம் பழம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மதுரையில் அண்ணாநகர், கே.கே. நகர், புதூர், விளாச்சேரி, சிம்மக்கல், கருப்பாயூரணி, வண்டியூர், செல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலையோரக் கடைகளில் எலுமிச்சம் பழம் ஓன்றின் விலை ரூ. 5-க்கு விற்கப்பட்டதாம்.

மதுரை நகரின் நிலவும் கடும் வெப்பத்தால், மக்கள் பழச்சாறு எடுக்க அதிகம் பயன்படுத்துவதாலும், தேவை அதிகரிப்பாலும், கடந்த மாதம் வரை விற்கப்பட்டு வந்த எலுமிச்சம்பழம் ரூ. 3-க்கு விற்கப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்புக்கு பிறகு, இப் பழத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் கடைகளின் பழச்சாறு விலையும் உயரும் நிலை ஏற்படலாம்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories