பஸ் இன்றி குழந்தைகளுடன் தவித்த பெண்! உதவிய நெல்லை துணை ஆணையர்!

nellai sripuram
nellai sripuram

நெல்லை ஸ்ரீபுரத்தில் … பேருந்து கிடைக்காமல் குழந்தைகளுடன் பஸ் நிறுத்தத்தில் தவித்தார் அந்தப் பெண். பார்த்த மாத்திரத்தில், ஓடிச் சென்று உதவினார், நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர்!

நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் பஸ் நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை இன்று இரவு சுமார் 9 மணி அளவில் ஒரு பெண் தனது இரண்டு மகன்களுடன் நின்று கொண்டிருந்தார். இதனை கவனித்த அந்த வழியாகச் சென்ற ஒருவர் அந்தப் பெண்ணிடம் பேருந்துக்காக காத்து நிற்கிறீர்களே இனிமேல் பேருந்து வராது. நீங்கள் எப்படி ஊருக்குச் செல்லப் போகிறீர்கள் என கேட்டார்.

அதற்கு அந்தப் பெண் பேருந்து வரும் என நினைத்து காத்திருக்கிறோம் என்றார். சிறிது நேரத்தில் பேருந்துக்காக தவிக்கும் குடும்பம் குறித்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் ஒரு தகவலைப் பெற்றார்.

உடனடியாக அவர் மைக் மூலம் நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பேருந்துக்கு நின்றபடி, தனியாக நிற்கும் பெண்மணி குறித்த தகவல் அவர்களுக்குச் சென்றது. இதையடுத்து நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்திலிருந்து காவல்துறை அதிகாரிகள் ஜீப்பில் விரைந்து வந்து அவர்கள் அங்கே நின்று கொண்டிருப்பதைக் கண்டனர்.

பஸ் ஏதும் இனி வராது என்று கூறி விட்டு, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தினர். ஆனால் அந்தப் பெண்மணியோ, தம்மிடம் வெறும் நூறு ரூபாய் தான் உள்ளது என்றும், இந்த நேரத்தில் ஆட்டோவுக்கு பணம் கொடுத்து செல்லும் அளவுக்கு தனக்கு இயலாத சூழலில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து போலீஸார் தகவல் தெரிவிக்கவே, நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன், தாய் மகன்கள் என அந்த மூவரின் ஆட்டோ பயணத்திற்கான முழுப் பணத்தையும் தாம் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் போலீஸாரின் வற்புறுத்தலில் அந்தப் பெண்ணும் ஆட்டோவில் ஏறும் போது, போலீசார் ஆட்டோவுக்கான பயணச் செலவை கொடுத்து விட்டதாகக் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட அந்தப் பெண்மணி கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, ஆட்டோவில் புறப்பட்டார்.

இது குறித்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் தெரிவிக்கையில், “காவல்துறையினர் நமக்கு உதவுவார்கள்; நம்மைப் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் வரவேண்டும்! அதனை ஏற்படுத்துவதை என் கடமையாக நினைக்கிறேன்” என்றார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories