December 6, 2025, 10:05 AM
26.8 C
Chennai

பஸ் இன்றி குழந்தைகளுடன் தவித்த பெண்! உதவிய நெல்லை துணை ஆணையர்!

nellai sripuram
nellai sripuram

நெல்லை ஸ்ரீபுரத்தில் … பேருந்து கிடைக்காமல் குழந்தைகளுடன் பஸ் நிறுத்தத்தில் தவித்தார் அந்தப் பெண். பார்த்த மாத்திரத்தில், ஓடிச் சென்று உதவினார், நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர்!

நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் பஸ் நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை இன்று இரவு சுமார் 9 மணி அளவில் ஒரு பெண் தனது இரண்டு மகன்களுடன் நின்று கொண்டிருந்தார். இதனை கவனித்த அந்த வழியாகச் சென்ற ஒருவர் அந்தப் பெண்ணிடம் பேருந்துக்காக காத்து நிற்கிறீர்களே இனிமேல் பேருந்து வராது. நீங்கள் எப்படி ஊருக்குச் செல்லப் போகிறீர்கள் என கேட்டார்.

அதற்கு அந்தப் பெண் பேருந்து வரும் என நினைத்து காத்திருக்கிறோம் என்றார். சிறிது நேரத்தில் பேருந்துக்காக தவிக்கும் குடும்பம் குறித்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் ஒரு தகவலைப் பெற்றார்.

உடனடியாக அவர் மைக் மூலம் நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பேருந்துக்கு நின்றபடி, தனியாக நிற்கும் பெண்மணி குறித்த தகவல் அவர்களுக்குச் சென்றது. இதையடுத்து நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்திலிருந்து காவல்துறை அதிகாரிகள் ஜீப்பில் விரைந்து வந்து அவர்கள் அங்கே நின்று கொண்டிருப்பதைக் கண்டனர்.

பஸ் ஏதும் இனி வராது என்று கூறி விட்டு, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தினர். ஆனால் அந்தப் பெண்மணியோ, தம்மிடம் வெறும் நூறு ரூபாய் தான் உள்ளது என்றும், இந்த நேரத்தில் ஆட்டோவுக்கு பணம் கொடுத்து செல்லும் அளவுக்கு தனக்கு இயலாத சூழலில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து போலீஸார் தகவல் தெரிவிக்கவே, நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன், தாய் மகன்கள் என அந்த மூவரின் ஆட்டோ பயணத்திற்கான முழுப் பணத்தையும் தாம் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் போலீஸாரின் வற்புறுத்தலில் அந்தப் பெண்ணும் ஆட்டோவில் ஏறும் போது, போலீசார் ஆட்டோவுக்கான பயணச் செலவை கொடுத்து விட்டதாகக் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட அந்தப் பெண்மணி கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, ஆட்டோவில் புறப்பட்டார்.

இது குறித்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் தெரிவிக்கையில், “காவல்துறையினர் நமக்கு உதவுவார்கள்; நம்மைப் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் வரவேண்டும்! அதனை ஏற்படுத்துவதை என் கடமையாக நினைக்கிறேன்” என்றார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories