ஜெ.அன்பழகன் குணம்பெற… மருந்து வாங்கி அனுப்பி வைத்த டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்!

tamilisai soundarrajan
tamilisai soundarrajan

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் குணம் பெற, ஹைதராபாத்தில் இருந்து அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கி அனுப்பி வைத்ததாக தகவல்கள் வெளியாகின.

கடந்த ஜூன் 2 ஆம் தேதி அன்று, மூச்சுத்திணறல் காரணமாக குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட ஜெ.அன்பழகனுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், ஜெ.அன்பழகன் உடல்நிலை மோசமானதால் 3ஆம் தேதியிலிருந்து வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், அவருக்கு 80% க்கும் அதிகமான ஆக்சிஜன் வழங்கப் பட்டு, செயற்கை சுவாச முறையிலேயே அவர் இருப்பதாகவும், பின்னர் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டு, ஆக்சிஜன் வழங்கல் 40% என்ற அளவில் இருப்பதாகவும் மருத்துவமனை தகவல் வெளியிட்டது.

remdesivir antiviral
remdesivir antiviral
remdisivir
remdisivir

இந்நிலையில், இரு தினங்கள் முன் மீண்டும் மருத்துவமனை வெளியிட்ட தகவலில், மீண்டும் அவரது உடல் நிலை மோசமடைந்ததாகவும், சிறுநீரகம் மற்றும் இதயத்தின் செயல்பாடு கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிடது.

இந்நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவரும் தெலங்காணா ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஹைதராபாத்திலிருந்து கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது.

தெலங்காணாவில் கொரோனா பாதிப்புக்கு ரெம்டெசிவிர் மருந்து சிகிச்சைக்காகக் கொடுக்கப்படுவதாகவும், இந்த மருந்தால், குணமடையும் வேகம் 30% அதிகரிக்கும் என்றும் கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories