December 5, 2025, 4:50 PM
27.9 C
Chennai

நாமக்கல் அருகே புளூவேல் விளையாட்டில் சிக்கிய மாணவன் மீட்பு

IMG 20170904 WA0010 - 2025

நாமக்கல் அருகே புளூவேல் விளையாட்டில் சிக்கிய பள்ளி மாணவனை மீட்டு ஆலோசனையும்
அறிவுரையும் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் படமூடி பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவன்
நேற்று முன்தினம் தனது தந்தையின் செல்போனை வாங்கி அதில் இன்டர்நெட் மூலம்
புளூவேல் அப்ளிகேசனை டவுண்லோடு செய்து, அதனை செல்போனில் இன்ஸ்டால் செய்து
புளூவேல் கேம் விளையாட ஆரம்பித்தான்.

முதலில் ஆர்வமாக விளையாடத் தொடங்கிய அவன், பின்னர் விளையாட்டில் தீவிரமாக
மூழ்கினான்.

இதனால் அதில் இருந்து அவனால் மீண்டு வரமுடியவில்லை. அதன் கட்டளைக்கு ஏற்ப
செயல்பட தொடங்கினான்.

ஆரம்பத்தில் வீட்டில் கூர்மையான பிளேடு இருக்கிறதா? என அவனிடம் கேள்வி
எழுப்பினார்கள்.

அதற்கு அம்மாணவன் ஆம் என்று பதில் அளித்தான்.

இதையடுத்து அந்த பிளேடை பயன்படுத்தி கையில் நீல திமிங்கலத்தை வரையுமாறு
உத்தரவிட்டனர்.

பின்னர் அந்த உத்தரவுக்கு ஏற்ப மாணவன் பிளேடை எடுத்து வந்து தனது கையை கீறி
நீல திமிங்கலம் உருவத்தை வரைந்தான்.

அப்போது அவனது தந்தை அங்கு வந்தார். மகன் புளூவேல் விளையாட்டில் மூழ்கி
இருப்பதை கண்டதும், அவனது கையில் இருந்து செல்போனை வாங்கி கொண்டார். ஆனால்
அவர் தனது மகன் கையில் நீல திமிங்கலம் உருவத்தை வரைந்து இருப்பதை
பார்க்கவில்லை.

பின்னர் நேற்று காலையில் மாணவன் பள்ளிக்கு சென்றான். அப்போது அவனது கையில்
இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருப்பதை சக மாணவர்கள் கண்டு அதிர்ச்சி
அடைந்தனர்.

உடனே பள்ளியில் வைத்து அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆசிரியர்கள்
பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவனது பெற்றோருக்கு இது பற்றி தெரிவித்து ஆலோசனையும் அறிவுரையும்
கூறினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories