கடன் தொல்லை: மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை!

கடன் தொல்லை காரணமாக, மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டம் யாகப்பா நகரைச் சேர்ந்தவர் குறிஞ்சி குமரன். இவருக்குச் சொந்தமாக ஒரு நர்சரி பள்ளி உள்ளதாம்.  அதுமட்டுமின்றி கடை வைத்தும் வியாபாரம் செய்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் தொழிலிலும் அவர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடன் தொல்லையால் மன உளைச்சல் ஏற்பட்டு குறிஞ்சி குமரன் குடும்பத்தினர் 8 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதியினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில், 8 பேரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதில், வீட்டிலேயே ஜெயசக்தி, ஜெகஜோதி, வேல்முருகன், குறிஞ்சிமுருகன், தாரணி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்குப் போராடிய தேவி, தங்கச்செல்வி, மோனிகா ஆகியோரை மீட்ட அப்பகுதியினர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில்  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை குறித்து மதுரை அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய உயிரிழந்தவர்களின் உறவினர்கள், ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தும், ஒரு மணி நேரம் தாமதமாக வந்தனர். நான்குபேரை மோட்டார் சைக்கிளிலும், இருவரை மினிபஸ்சிலும் கொண்டு சேர்த்தோம் என்று குற்றம் சாட்டியுனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories