December 5, 2025, 11:38 PM
26.6 C
Chennai

கடன் தொல்லை: மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை!

கடன் தொல்லை காரணமாக, மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டம் யாகப்பா நகரைச் சேர்ந்தவர் குறிஞ்சி குமரன். இவருக்குச் சொந்தமாக ஒரு நர்சரி பள்ளி உள்ளதாம்.  அதுமட்டுமின்றி கடை வைத்தும் வியாபாரம் செய்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் தொழிலிலும் அவர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடன் தொல்லையால் மன உளைச்சல் ஏற்பட்டு குறிஞ்சி குமரன் குடும்பத்தினர் 8 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதியினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில், 8 பேரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதில், வீட்டிலேயே ஜெயசக்தி, ஜெகஜோதி, வேல்முருகன், குறிஞ்சிமுருகன், தாரணி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்குப் போராடிய தேவி, தங்கச்செல்வி, மோனிகா ஆகியோரை மீட்ட அப்பகுதியினர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில்  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை குறித்து மதுரை அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய உயிரிழந்தவர்களின் உறவினர்கள், ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தும், ஒரு மணி நேரம் தாமதமாக வந்தனர். நான்குபேரை மோட்டார் சைக்கிளிலும், இருவரை மினிபஸ்சிலும் கொண்டு சேர்த்தோம் என்று குற்றம் சாட்டியுனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories