February 21, 2026, 4:15 PM
30.4 C
Chennai

கடன் தொல்லை: மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை!

கடன் தொல்லை காரணமாக, மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டம் யாகப்பா நகரைச் சேர்ந்தவர் குறிஞ்சி குமரன். இவருக்குச் சொந்தமாக ஒரு நர்சரி பள்ளி உள்ளதாம்.  அதுமட்டுமின்றி கடை வைத்தும் வியாபாரம் செய்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் தொழிலிலும் அவர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடன் தொல்லையால் மன உளைச்சல் ஏற்பட்டு குறிஞ்சி குமரன் குடும்பத்தினர் 8 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதியினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில், 8 பேரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதில், வீட்டிலேயே ஜெயசக்தி, ஜெகஜோதி, வேல்முருகன், குறிஞ்சிமுருகன், தாரணி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்குப் போராடிய தேவி, தங்கச்செல்வி, மோனிகா ஆகியோரை மீட்ட அப்பகுதியினர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில்  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை குறித்து மதுரை அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய உயிரிழந்தவர்களின் உறவினர்கள், ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தும், ஒரு மணி நேரம் தாமதமாக வந்தனர். நான்குபேரை மோட்டார் சைக்கிளிலும், இருவரை மினிபஸ்சிலும் கொண்டு சேர்த்தோம் என்று குற்றம் சாட்டியுனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories