வெள்ளரிக்காய் கடைக்காரரிடம் வசூல் வேட்டை நடத்தும் மதுரை போலீஸ்!

போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தினை உருவாக்கும் வெள்ளரிக்காய் கடைக்காரரிடம் போக்குவரத்து போலீசார் தினமும் மாமூல் வாங்கி வருவதாக வாகன ஓட்டிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அரசரடி மற்றும் எல்லீஸ் நகர் பகுதிக்கு செல்வதற்காக மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் நடுவில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தினை உருவாக்கும் வகையில் இரு நபர்கள் வெள்ளரிக்காய் கடையை தினமும் அமைத்து அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளை வழிமறித்து வியாபாரம் செய்து வருகின்றனராம்.

இதனால் வெள்ளரிக்காய் கடை உள்ள இடத்தில் பலர் வாகனங்களை நிறுத்தி வாங்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமல்லாமல் விபத்துக்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறதாம் .

இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் கவனச் சிதைவு காரணமாக சிறு விபத்துக்குள்ளான வாகன ஓட்டி ஒருவர் அந்த வெள்ளரிக்காய் கடைக்காரரிடம் கடையை எடுக்கச் சொல்லி கூறினாராம். அப்போது அந்த கடைக்காரர் கடையை எடுக்க மறுத்து, “நீ வாகனத்தை ஒழுங்காக ஓட்டினால் உனக்கு விபத்து ஏற்படுமா” என தகாத வார்த்தைகளால் திட்டினாராம் .

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

இதுகுறித்து அப்பகுதியிலுள்ள சிக்னல் அருகில் பணியாற்றும் போக்குவரத்து போலீசிடம் புகார் தெரிவிப்பேன் என அந்த வாகன ஓட்டி கூறினாராம். அப்போது அந்த கடைக்காரர் அங்கு பணியாற்றும் போக்குவரத்து போலீசார் தினமும் என்னிடம் மாமூல் வாங்கிக் கொண்டுதான் இங்கு கடையையே போட அனுமதித்துள்ளார்கள் என்றும் உன்னால் என்னை ஒன்றும் செய்யமுடியாது எனக் கூறி உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்றும் கூறினாராம்.

போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தினை தடுக்க வேண்டிய போலீசாரே மாமூல் வாங்கிக் கொண்டு அதனை கண்டுகொள்ளாமல் ஊருக்கு மட்டும் உபதேசம் செய்கின்றனரோ ?

செய்தி: அருண் குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories