வெள்ளரிக்காய் கடைக்காரரிடம் வசூல் வேட்டை நடத்தும் மதுரை போலீஸ்!

போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தினை உருவாக்கும் வெள்ளரிக்காய் கடைக்காரரிடம் போக்குவரத்து போலீசார் தினமும் மாமூல் வாங்கி வருவதாக வாகன ஓட்டிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அரசரடி மற்றும் எல்லீஸ் நகர் பகுதிக்கு செல்வதற்காக மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் நடுவில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தினை உருவாக்கும் வகையில் இரு நபர்கள் வெள்ளரிக்காய் கடையை தினமும் அமைத்து அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளை வழிமறித்து வியாபாரம் செய்து வருகின்றனராம்.

இதனால் வெள்ளரிக்காய் கடை உள்ள இடத்தில் பலர் வாகனங்களை நிறுத்தி வாங்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமல்லாமல் விபத்துக்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறதாம் .

இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் கவனச் சிதைவு காரணமாக சிறு விபத்துக்குள்ளான வாகன ஓட்டி ஒருவர் அந்த வெள்ளரிக்காய் கடைக்காரரிடம் கடையை எடுக்கச் சொல்லி கூறினாராம். அப்போது அந்த கடைக்காரர் கடையை எடுக்க மறுத்து, “நீ வாகனத்தை ஒழுங்காக ஓட்டினால் உனக்கு விபத்து ஏற்படுமா” என தகாத வார்த்தைகளால் திட்டினாராம் .

இதுகுறித்து அப்பகுதியிலுள்ள சிக்னல் அருகில் பணியாற்றும் போக்குவரத்து போலீசிடம் புகார் தெரிவிப்பேன் என அந்த வாகன ஓட்டி கூறினாராம். அப்போது அந்த கடைக்காரர் அங்கு பணியாற்றும் போக்குவரத்து போலீசார் தினமும் என்னிடம் மாமூல் வாங்கிக் கொண்டுதான் இங்கு கடையையே போட அனுமதித்துள்ளார்கள் என்றும் உன்னால் என்னை ஒன்றும் செய்யமுடியாது எனக் கூறி உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்றும் கூறினாராம்.

போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தினை தடுக்க வேண்டிய போலீசாரே மாமூல் வாங்கிக் கொண்டு அதனை கண்டுகொள்ளாமல் ஊருக்கு மட்டும் உபதேசம் செய்கின்றனரோ ?

செய்தி: அருண் குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories