அழைத்தால் போதும்: காவல்துறை உதவி கிடைக்கும்

Published:

நெல்லை மாவட்ட பொதுமக்களின் அவசர கால உதவிக்கு  ஹலோ போலீஸ் என்ற புதிய திட்டத்தை எஸ்.பி. விக்ரமன்  துவக்கி வைத்தார்.
 பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்கள் மற்றும் அவசரகால உதவிக்கு எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ள  ஹலோ போலீஸ்  என்ற புதிய திட் டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் 99527 40740 என்ற செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு தங்களது புகார்கள் மற்றும் குற்றச்செயல்கள் குறித்து தெரிவிக்கலாம்.
மேலும், இந்த நம்பருக்கு வாட்ஸ்அப், மெசேஜ் அல்லது வாய்ஸ் மெயிலிலும் தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவர்களுக்கு நாங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பது குறித்து பதில் தகவல் அளிக்கப்படும். இதில் நானும் எனக்கு கீழ் உள்ள மூன்று அதிகாரிகளும் தகவல்களை பெற்று உடனே நடவடிக்கை எடுப்போம். இதுபோன்ற திட்டத்தை விழுப்புரத்தில் முதன் முதலில் துவக்கி வைத்தோம். அதற்கு நல்ல பலன்கள் கிடைத்தது.
இந்த நம்பரில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள், கூலி தொழிலாளிகள் உட்பட யார் வேண்டுமென்றாலும் தகவல்களை 24மணி நேரமும் அனுப்பி வைக்கலாம்.
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img