கடலூரில் கன மழை எச்சரிக்கை: விரைந்தது மீட்புக் குழு

Published:

கடலூர்:

கடலூரில் கனமழை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. எப்போதுமே அதிக பாதிப்பை சந்திக்கும் கடலூரில் கன மழை எச்சரிக்கை விடுக்கப் பட்டதை அடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கடலூருக்கு விரைந்துள்ளனர்.

அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 40 பேர் கடலூருக்கு விரைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

5ம் தேதி துவங்கி அடுத்த 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று வானிலை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img