February 11, 2025, 11:09 AM
27.5 C
Chennai

மாணவன் தற்கொலை! ஆசிரியர் கூற்றா.. காதலின் தெற்றா?

sanjay-kumar
sanjay-kumar

அரும்பாக்கம் வினாயகபுரம் தெருவை சேர்ந்த சஞ்சய் குமார்(15). மதுரவாயலில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். நேற்று வீட்டில் இருந்து மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றான். மதியம் 12 மணிக்கு வீட்டிற்கு வந்த சஞ்சய் குமார் தனது அறைக்கு சென்றான். ஆனால் வெகு நேரமாக அறையில் இருந்து வெளியே சஞ்சய் குமார் வராததால் சந்தேகமடைந்த அவனது தந்தை மாதவன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, சஞ்சய் குமார் புடவையால் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலின்பேரில் சூளைமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சஞ்சய் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சஞ்சய் குமார் அதிகளவில் தலையில் முடி வளர்த்து இருந்தான். அந்த முடியுடன் தான் பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது பள்ளி ஆசிரியர் ஒருவர் சஞ்சய் குமாரிடம், ‘தலை முடி அதிகளவில் இருக்கிறது. நீ தலைமுடியை வெட்டி கொண்டு பள்ளிக்கு வா’ என்று கூறி மாணவனை வீட்டிற்கு திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் கூறியதால் மனமுடைந்த சஞ்சய் குமார் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மாணவன் தற்கொலை குறித்து தனியார் பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவனை திருப்பி அனுப்பிய ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம், உடன் பள்ளியில் படிக்கும் அவனது நண்பர்கள், சஞ்சய் குமார் பள்ளியில் படிக்கும் சக மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளதாகவும், தனது காதலை மாணவி ஏற்றுக்கொள்ளாததால் தற்கொலை முடிவுக்கு வந்து இருக்க கூடும் என்றும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாணவன் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

1 COMMENT

  1. 12aam vaguppu padikkum manavannukku eppadi 15 vayadhaagum,andha manavanin vayadhu 18 avnukku vangiyil ATM card ullathu.appo epdi 15 vayadhu irukkum,visaranai mulumaiyaaga nadandhadha?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

Topics

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories