February 21, 2026, 8:00 AM
24.6 C
Chennai

மர்ம உறுப்பு சிதைந்த நிலையில் கிடந்த சடலம்! பின்னணி என்ன?

auto-driver-1
auto-driver-1

மதுரை ஜெய்ஹிந்த்புரம் திருப்பதி நகரை சேர்ந்த காதர் மஸ்தான் என்பவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரசூல் பாத்திமா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் வழக்கம்போல் ஆட்டோ ஓட்டும் பணிக்கு சென்ற காதர் மஸ்தான் மீண்டும் வீட்டிற்கு குடித்துவிட்டு போதையில் வந்துள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் அவர் மீண்டும் ஆட்டோவுடன் வெளியே சென்றார்.

பின்னர் இரவு வீடு திரும்பாத நிலையில், காலை சோலையழகுபுரம் பகுதியில் மர்ம உறுப்பு சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பட்டபகலில் சாலை ஓரத்தில் மர்ம உறுப்பு சிதைக்கப்பட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காதர் மஸ்தான் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனை அவரது மனைவி ரசூல் பாத்திமா கண்டித்துள்ளார். அதன் காரணமாக காதர் மஸ்தான் அடிக்கடி மனைவியிடம் பிரச்சனை செய்து வந்ததால் தொடர்ந்து வீட்டில் உறவினர்களோடும் பிரச்சினை இருந்து வந்தததாகவும் கூறப்படுகிறது.

மேலும் வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தவறான பழக்கத்தால் உறவினர்களே கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றகோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories