February 21, 2026, 7:59 AM
24.6 C
Chennai

வேலை செய்த இடத்தில் நகை பணம் கொள்ளை! இரண்டு பெண்கள் கைது!

robbery-1
robbery-1

திருப்பத்தூர் அருகே கொள்ளை சம்பவத்தில் சிக்கிய 2 பேர், அதிலிருந்து தப்பிக்க கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருக்கும் பெரியபேட்டை பகுதியில் வசித்து வருபவர் பாலசுப்ரமணி. இவர் பல இடங்களில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சந்திரா, சோனியா ஆகியோர் பணியாற்றி வந்தனர். நிதி நிறுவனத்திற்கு வரும் நகை மட்டும் பணத்தை கண்காணிப்பதே இவர்களது பணி. இவர்கள் இருவரும் தங்களது அதில் கைவரிசையை காட்டியது அம்பலமானது.

கடந்த டிசம்பர் மாதம் அலுவலகத்தின் கணக்குகளை சரிபார்த்த போது சந்திரா மற்றும் சோனியா ரூ.24 லட்சம் பணமும், 46 சவரன் நகையும் கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கையும் களவுமாக சிக்கிய பெண்கள் பணத்தை திருப்பித்தருவதாக தெரிவித்தும், பாலசுப்ரமணி அவர்களை பணிநீக்கம் செய்து பணத்தை திரும்பக் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில், கடந்த டிச.9ம் தேதி பாலசுப்ரமணி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரது மனைவியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

robbery-1-1
robbery-1-1

இது தொடர்பாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் விஷ்ணு, பிரகாஷ், அங்கப்பன் ஆகியோர் சிக்கினர். அவர்கள் 3 பேரும் சந்திரா மற்றும் சோனியா, பாலசுப்ரமணியை கொலை செய்வதற்காக வைத்த அடியாட்கள் என்பது விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து, சந்திரா, சோனியாவை கைது செய்த போலீசார் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories