ஆசிரியைக்கு கொரோனா: தேர்தல் பயிற்சிக்கு சென்றதால் அலுவலர்கள் பீதி!

corona-test
corona-test

பெரம்பலூர் நகரில் பள்ளி ஆசிரியர் தம்பதியினர், அவரது மகன் திருச்சி கல்லூரி மாணவர் ஆகிய மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் நகராட்சி, எளம்பலூர் சாலையில் வசித்து வரும் 49 வயது மதிக்கத்தக்க சித்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 15ம் தேதி சளி மற்றும் இருமலுடன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் சரியாகாததால் அவர் 17ம் தேதி பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் இருதய எக்ஸ்ரே பரிசோதனை செய்துள்ளார்.

அதற்கேற்ற பரிந்துரைப்படி மாத்திரை சாப்பிட்டும் காய்ச்சல் சரியாகாததால் 19ம்தேதி திருச்சி தனியார் மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு பாசிட்டிவ் என பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

உடனே அதே தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவர் கடந்த 10ம்தேதி கொரோனா தடுப்பூசி முதல்டோஸ் போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு இவர் கடந்த 17ம் தேதி மேலமாத்தூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குன்னம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சியில் தனது மனைவி சிறுகுடல் பள்ளி ஆசிரியையுடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கீதாராணி உத்தரவின் பேரின் சித்தளி ஆசிரியரின் மனைவி, திருச்சி தனியார் கல்லூரியில் படிக்கும் மகன் உள்ளிட்ட 4 பேர்களுக்கும் அதே தெருவை சேர்ந்த 50 பேர்களுக்கும், மேலமாத்தூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 17ம்தேதி இவருடன் சேர்ந்து பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், தேர்தல் பயிற்சியாளர் உள்பட 30பேர்களுக்கும், சித்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 7 பேர், ஆசிரியரின் மனைவி பணிபுரிந்த சிறுகுடல் பள்ளி ஆசிரியர்கள் 10பேர் என மொத்தம் 100 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் கொரோனா பாதித்தவரின் ஆசிரியை மனைவிக்கும், திருச்சி தனியார் கல்லூரி மாணவனான 1 மகனுக்கும் என 2பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் திருச்சியில் ஆசிரியர் சிகிச்சைபெறும் அதே தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரி மன்னன் உத்தரவின் பேரில் சாலையில் உள்ள ஆசிரியரின் வீடு அவர் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை செய்து வந்த காமராஜர் வளைவு அருகே உள்ள கடை ஆகியவை, பேரிகார்டு அமைத்து கிருமிநாசினிகள் தெளித்து, இதர நபர்கள் அங்கு பிரவேசிக்கக் கூடாது என வலியுறுத்தப் பட்டுள்ளது. சித்தளி, சிறுகுடல் ஆகிய 2 பள்ளிகளையும் சில தினங்கள் மூடி வைக்க சுகாதாரத் துறை சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories