ஆசிரியைக்கு கொரோனா: தேர்தல் பயிற்சிக்கு சென்றதால் அலுவலர்கள் பீதி!

corona-test
corona-test

பெரம்பலூர் நகரில் பள்ளி ஆசிரியர் தம்பதியினர், அவரது மகன் திருச்சி கல்லூரி மாணவர் ஆகிய மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் நகராட்சி, எளம்பலூர் சாலையில் வசித்து வரும் 49 வயது மதிக்கத்தக்க சித்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 15ம் தேதி சளி மற்றும் இருமலுடன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் சரியாகாததால் அவர் 17ம் தேதி பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் இருதய எக்ஸ்ரே பரிசோதனை செய்துள்ளார்.

அதற்கேற்ற பரிந்துரைப்படி மாத்திரை சாப்பிட்டும் காய்ச்சல் சரியாகாததால் 19ம்தேதி திருச்சி தனியார் மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு பாசிட்டிவ் என பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

உடனே அதே தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவர் கடந்த 10ம்தேதி கொரோனா தடுப்பூசி முதல்டோஸ் போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு இவர் கடந்த 17ம் தேதி மேலமாத்தூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குன்னம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சியில் தனது மனைவி சிறுகுடல் பள்ளி ஆசிரியையுடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றுள்ளார்.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கீதாராணி உத்தரவின் பேரின் சித்தளி ஆசிரியரின் மனைவி, திருச்சி தனியார் கல்லூரியில் படிக்கும் மகன் உள்ளிட்ட 4 பேர்களுக்கும் அதே தெருவை சேர்ந்த 50 பேர்களுக்கும், மேலமாத்தூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 17ம்தேதி இவருடன் சேர்ந்து பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், தேர்தல் பயிற்சியாளர் உள்பட 30பேர்களுக்கும், சித்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 7 பேர், ஆசிரியரின் மனைவி பணிபுரிந்த சிறுகுடல் பள்ளி ஆசிரியர்கள் 10பேர் என மொத்தம் 100 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் கொரோனா பாதித்தவரின் ஆசிரியை மனைவிக்கும், திருச்சி தனியார் கல்லூரி மாணவனான 1 மகனுக்கும் என 2பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் திருச்சியில் ஆசிரியர் சிகிச்சைபெறும் அதே தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரி மன்னன் உத்தரவின் பேரில் சாலையில் உள்ள ஆசிரியரின் வீடு அவர் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை செய்து வந்த காமராஜர் வளைவு அருகே உள்ள கடை ஆகியவை, பேரிகார்டு அமைத்து கிருமிநாசினிகள் தெளித்து, இதர நபர்கள் அங்கு பிரவேசிக்கக் கூடாது என வலியுறுத்தப் பட்டுள்ளது. சித்தளி, சிறுகுடல் ஆகிய 2 பள்ளிகளையும் சில தினங்கள் மூடி வைக்க சுகாதாரத் துறை சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.

ALSO READ:  மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories