சிலிண்டர் வெடித்து தனியார் நிறுவன கணக்காளர் உயிரிழப்பு!

gas - 2026

மதுரையில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் தனியார் நிறுவன கணக்காளர் உயிரிழந்தார். இவர் சிலிண்டரை வெடிக்க வைத்து, தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை பாலரெங்கபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (43). தனியார் நிறுவன கணக்காளர். திருமணமாகாத இவர், தனது தாயாருடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 1 மணியளவில் திடீரென இவரது வீட்டில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. வீட்டில் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளியேறியது.

அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். வீட்டின் சமையலறை சுவர் இடிந்து கிடந்ததுடன், அறையிலிருந்த காஸ் சிலிண்டர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

அருகில் தீக்காயங்களுடன், இடிபாடுகளுக்கிடையே சரவணன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அனுப்பானடி தீயணைப்பு நிலையம் மற்றும் தெப்பக்குளம் காவல்நிலையத்திற்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு அலுவலர் உதயகுமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தீ மேலும் பரவாமல் தடுத்து, உடனடியாக அணைத்தனர்.

மற்றொரு அறையில் இருந்த சரவணின் தாயார் அதிர்ஷ்டவசமாக விபத்தில் காயமடையவில்லை. தெப்பக்குளம் போலீசார் அவரிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் சரவணின் உடலை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சமீபகாலமாக கணக்கு எழுதும் பணி சரிவர கிடைக்காததால், சரவணன் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து காஸ் சிலிண்டரை திறந்து தீவைத்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது சிலிண்டர் வெடித்ததில் அவர் உயிரிழந்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இவ்விபத்தில் அருகில் உள்ள திருமண மண்டபத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டுச்சுவர் சேதமடைந்தது. மேலும் மண்டபத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட டூவீலர்கள் எரிந்து நாசமடைந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories