February 21, 2026, 9:44 PM
27.3 C
Chennai

ரயில் நிலையத்தில் மனித எலும்புக்கூடு! பயணிகள் அதிர்ச்சி!

Skeleton - 2026

சென்னை அடையாறு ரயில் நிலையத்தில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது உள்ளது. இந்த சம்பவம் அங்கு பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அடையாறு பறக்கும் ரயில் நிலையத்தின் கீழ் தளத்தில், மனித எலும்புக்கூடு ஒன்று கிடந்துள்ளது. இதை அந்த வழியாக சென்ற பயணிகள் சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இதுபற்றி போலீசாருக்கு தகவல் பறந்தது . இதையடுத்து ரயில்வே காவல்துறையினர் அங்கு விரைந்தனர்.

இந்த ரயில் நிலையம் அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியாகும்.
எலும்பு கூடு கிடந்த இடம், ரயில்வே பாதுகாப்பு படை விசாரணை எல்லைக்கு உட்பட்ட பகுதியா அல்லது அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியா என்பதில் இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

சென்னை வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் வரை இந்த தகவல் பறந்துள்ளது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் அபிராமபுரம் காவல் துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். தடயவியல் துறையினரும், அங்கு விரைந்தனர்.

railway station - 2026

இதையடுத்து பரிசீலனைக்கு பிறகு, எலும்புக்கூடு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல்கட்ட தகவல்படி , கண்டெடுக்கப்பட்டது ஒரு ஆண் எலும்புக்கூடு என்று கூறப்படுகிறது. தடயவியல் துறையினர் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

சந்தேக மரணம் என்ற அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வேறு எங்காவது கொலை செய்யப்பட்ட நபரின் எலும்பை கூட இங்கே கொண்டு சென்று போட்டனரா அல்லது பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது பற்றி போலீசார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

எனவே ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories