ஏமாற்றிச் சென்ற காதலன்! தர்ணா செய்த காதலி!

kathali
kathali

காதலனை கண்டுபிடித்து தரக் கோரி புகாரளித்த கல்லூரி மாணவியை போலீசார் தாக்கியதாக கூறி மாணவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கொக்குபட்டியைச் சேர்ந்த கோபால் மகள் பாக்கியஷீலா (வயது 19) . இவர் திருச்சியில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு பி. எஸ். சி படித்து வருகிறார்.

இதே ஊரைச் சேர்ந்த சுப்பையா மகன் வாசுதேவா (வயது 26) எம். சி. ஏ படித்த பட்டதாரி. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

பாக்கியஷீலாவை திருமணம் செய்து கொள்கிறேன் எனக் ஆசை வார்த்தை கூறி பாக்கிய ஷீலாவை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று தனிமையில் வாசுதேவா இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் 8.5.2021 வீட்டில் யாரும் இல்லாதபோது வாசுதேவனும், பாக்கிய ஷீலாவும் தனியாக இருந்துள்ளார்கள். இதை அறிந்த அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கையும் ,களவுமாகப் பிடித்து விசாரணை செய்தனர்.

இதன் பின்னர் வாசுதேவா தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாக்கிய ஷீலா புகாரில் தப்பியோடிய காதலனை கண்டுபிடித்து சேர்த்து வைக்கும்படி கூறி புகார் கொடுத்தார்.

kadha
kadha

இதனை விசாரித்த போலீஸ், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரியாக விசாரிக்காமல் பாக்கிய ஷீலாவை தாக்கியதாக கூறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது பாக்கிய ஷீலா கூறியதாவது: நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தபோது என்னை போலீசாரும் அங்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் லத்தியால் தாக்கினார்கள்.

எனக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி கண்ணீர் மல்க கதறியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் பாக்கிய ஷீலாவை அழைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசப்படுத்தினார்கள். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Topics

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Entertainment News

Popular Categories