அடுத்தவனோடு இருக்க வற்புறுத்தி கொடுமை! கணவன் குடும்பத்தார் செய்கையால் அதிர்ச்சியான பெண்!

venkatesh
venkatesh

சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வருபவர் கல்பனா. 38 வயதான இவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் மணிகண்டன் என்ற நபருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியாகச் சென்ற திருமண வாழ்க்கையின் பயனாக இருவருக்கும் இரு மகள்கள் பிறந்தனர்.

இந்த சூழ்நிலையில் திடீரென கல்பனா, மணிகண்டன் தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் கடந்த 3 ஆண்டுகளாக கல்பனா தனியார் விடுதியில் தங்கி, வங்கி ஒன்றில் கிரெடிட் கார்டு பிரிவில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது பேஸ்புக் மூலம், ஆவடி அண்ணாநகரைச்சேர்ந்த 35 வயதான பிரசன்ன வெங்கடேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

பிரசன்ன வெங்கடேஷ் தனியார் கம்பெனி ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வருகிறார். ஆரம்பத்தில் நண்பர்களாகப் பேசி வந்த இவர்கள், அதன் பின் அது காதலாக மாற, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன் படி இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சென்னையில் உள்ள திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த சில நாட்களில் பிரசன்ன வெங்கடேஷ் தன்னுடைய தாய், தந்தையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

திருமணத்திற்குப் பிறகு மாமனார், மாமியாரோடு ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென்று ஒருநாள் பிரசன்ன வெங்கடேஷின் பெற்றோர் மற்றும் அவருடைய தங்கை ஆகியோர் கல்பனாவிடம், வேறொரு ஆண் வீட்டிற்கு வருவார் என்றும் அவருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு நிலைகுலைந்து போன கல்பனா, தனது கணவரிடம் இதுகுறித்து கூறுவேன் எனக் கூறியுள்ளார். கணவர் வீட்டிற்கு வந்ததும் நடந்த சம்பவம் குறித்து கல்பனா கூற, பிரசன்ன வெங்கடேஷ் அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டு அவர்கள் சொன்னதில் என்ன தவறு, நீ பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டும் எனக் கூறியுள்ளார். கணவன் என நம்பி வந்தவரின் இந்த பதில் கல்பனாவை நொறுங்கிப் போகச் செய்தது.

உடனே பிரசன்ன வெங்கடேஷ் இதற்கு நீ மறுத்தால், நாம் இருவரும் தனிமையில் இருக்கும் போது ரகசியமாக எடுத்த ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

கல்பனா இதற்குச் சம்மதம் தெரிவிக்காத நிலையில் அவரை அடித்து உதைத்ததுடன், அவரிடம் இருந்த 5 பவுன் நகை மற்றும் வங்கிக்கணக்கிலிருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்து மிரட்டி வந்துள்ளனர்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

ஒரு வழியாக அவர்களிடம் இருந்து தப்பிய கல்பனா, வெங்கடேஷ் வேலை செய்யும் தனியார் கம்பெனிக்கு சென்று விசாரித்தபோது அவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டதும், அந்த பெண்ணும் அதே நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த கல்பனா, அவரைப் பற்றித் தொடர்ந்து விசாரித்த போது, அவர் இது போன்று பல பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

உடனடியாக கல்பனா இது குறித்து, ஆவடி காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, பிரசன்ன வெங்கடேசனின் தந்தை ரங்கசாமி, அம்மா விஜயா, சகோதரி புவனேஸ்வரி உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அதன் பின் அவர்களைப் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Topics

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories