உள்ளாடையில் வைத்து தங்கம் பதுக்கல்! சுங்கத்தால் பறிமுதல்!

gold
gold

அண்மை காலத்தில் வெளிநாட்டில் இருந்து தங்கக் கடத்தல் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.

துபாயில் இருந்து சென்னை திரும்பிய 8 விமானப் பயணிகள், தங்கள் உள்ளாடைகள் உட்பட பல விதங்களில் 9 கிலோ தங்கத்தை மறைத்து கொண்டு வந்தது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

துபாயில் இருந்து தங்கக் கடத்தல் தொடர்ந்து அதிகரிப்பதை கருத்தில் கொண்டு சென்னை சுங்கத் துறை அதிகாரிகள் அதி தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

வளைகுடா நாடான (Gulf country) துபாயில் இருந்து வந்த எட்டு பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

அந்தப் பயணிகள் எமிரேட்ஸ் விமானம் ஈ.கே 544 (Emirates flight EK 544) வழியாக சென்னை வந்தனர். அவர்கள் பதற்றமாக இருப்பதைக் கண்ட அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. அவர்களிடம் விசாரணை செய்தபோது, முன்னுக்கு பின்னாக பதிலளித்துவிட்டு விரைந்து செல்ல முயன்றனர்.

பயணிகளின் பொருட்களை பரிசோதித்ததில் பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க பேஸ்ட், அவர்களின் ஜீன்ஸ் மற்றும் உள்ளாடைகளில் பதுக்கி வைத்திருந்த தங்கம் என தங்கக் கடத்தல் விவகாரம் அம்பலமானது.

அவர்களிடம் இருந்து 9 கிலோ அளவிலான 24 காரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது

இந்தத் தங்கத்தின் மதிப்பு4.5 கோடி ரூபாயாகும். பயணிகளிடம் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டு, சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக சென்னையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எங்கும் யாரும் சுதந்திரமாக சென்று வர முடியாது.

இந்த நிலையிலும் பயப்படாமல் தங்கக் கடத்தல் நடைபெறுவது அதிர்ச்சியளிப்பதாக மூத்த விமான சுங்க அதிகாரிகள் கூறுகின்றனர். அதோடு, சர்வதேச விமானங்களின் சேவையும் குறைவாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories