சென்னை: சென்னையில் உதவி ஆணையர் பெண் போலீஸ் ஒருவரிடம் ஆபாசமாகப் பேசிய ஒலிப் பதிவில், இருவரும் தங்களின் பெயர்களை அதில் தெரிவிக்கவில்லை. எனினும், தனது ‘வாட்ஸ்அப்புக்கு அந்தப் பெண்ணின் போட்டோவை அனுப்புமாறு கூறி, அவரது செல் போன் எண்ணைக் கொடுத்து பதிவு செய்யச் சொல்கிறார். இந்த செல்போன் எண்ணைக் கூறுவது மட்டும் சட்டபூர்வ மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதால், அந்த உதவி ஆணையரை பேசச் சொல்லி, குரல் மாதிரி எடுத்து உறுதி செய்ய போலீஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. . சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள தடயவியல் பரிசோதனை மையத்தில் இந்த குரல் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. வாட்ஸ் அப்பில் உலவும் உதவி ஆணையரின் பேச்சு…
பெண் போலீஸிடம் ஆபாசப் பேச்சு: உதவி ஆணையரின் குரல் மாதிரி பதிவு செய்ய முடிவு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

