February 21, 2026, 10:56 PM
27.3 C
Chennai

ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது எப்படி?: டாக்டர் பாலாஜி ரகசிய விளக்கம்!

சென்னை:
ஜெயலலிதாவிடம் யார் சொல்லி கைரேகை பெறப்பட்டது என்பது குறித்து, சம்பவத்தில் உடன் இருந்த டாக்டர் பாலாஜி, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பதில் அளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பரவலாக எழுந்த கோரிக்கையை அடுத்து, தமிழக அரசு ஓய்வு பெற்ற ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்த ஆணையத்துக்காக, சென்னை எழிலகத்தில் ஒரு அலுவலகம் ஒதுக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதாவுடன் நெருங்கிப் பழகிய, அலுவலக ரீதியாக தொடர்பு கொண்டிருந்த பலர், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், உதவியாளர்கள், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் என பலருக்கும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக நேற்று டாக்டர் பாலாஜி, இந்த விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலுக்காக ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு சுகாதாரத்துறை செயலாளரின் வாய்மொழி உத்தரவின் பேரில் ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது என பாலாஜி தெரிவித்ததாக தகவல் வெளியானது.

ஆனால், இவ்வாறு வெளிவரும் தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள டாக்டர் பாலாஜி, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “சுகாதாரத் துறைச் செயலாளர் கூறியதன் பேரில் ஜெயலலிதாவிடம் நான் கையெழுத்துப் பெறவில்லை. தேர்தல் ஆணைய விதிப்படியே ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories