December 6, 2025, 6:32 AM
23.8 C
Chennai

ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது எப்படி?: டாக்டர் பாலாஜி ரகசிய விளக்கம்!

சென்னை:
ஜெயலலிதாவிடம் யார் சொல்லி கைரேகை பெறப்பட்டது என்பது குறித்து, சம்பவத்தில் உடன் இருந்த டாக்டர் பாலாஜி, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பதில் அளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பரவலாக எழுந்த கோரிக்கையை அடுத்து, தமிழக அரசு ஓய்வு பெற்ற ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்த ஆணையத்துக்காக, சென்னை எழிலகத்தில் ஒரு அலுவலகம் ஒதுக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதாவுடன் நெருங்கிப் பழகிய, அலுவலக ரீதியாக தொடர்பு கொண்டிருந்த பலர், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், உதவியாளர்கள், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் என பலருக்கும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக நேற்று டாக்டர் பாலாஜி, இந்த விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலுக்காக ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு சுகாதாரத்துறை செயலாளரின் வாய்மொழி உத்தரவின் பேரில் ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது என பாலாஜி தெரிவித்ததாக தகவல் வெளியானது.

ஆனால், இவ்வாறு வெளிவரும் தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள டாக்டர் பாலாஜி, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “சுகாதாரத் துறைச் செயலாளர் கூறியதன் பேரில் ஜெயலலிதாவிடம் நான் கையெழுத்துப் பெறவில்லை. தேர்தல் ஆணைய விதிப்படியே ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories