கும்பகோணம் சிவன் கோயில் ஒன்றில் கருவறையில் பற்றி எரிந்த தீ ! தொடரும் ஆலய தீவிபத்துகளால் பாதகமா?

கும்பகோணம்:

கும்பகோணத்தில் உள்ள பழைமையான சிவன் கோவில் ஒன்றில் இன்று மதியம், கருவறையில் விளக்கு தட்டி எண்ணெய் விழுந்து தீ பற்றியது. இது பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும் பயத்தையும் தோற்றுவித்துள்ளது.

தமிழகத்தில் அண்மைக் காலமாக ஆலயங்களில் தீவிபத்துகள் நடப்பது அதிகரித்துள்ளது. கடந்த பிப்.2ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு, பழம் பெருமையும், கட்டடக் கலை உன்னதத்தைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதை அடுத்து திருவாலங்காடு தல மரம் தீப்பற்றியது. வேலூர் சத்துவாச்சாரி அம்மன் கோவில் தேர் தீப்பிடித்தது. கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயிலில் சமையலறை பக்கம் தீப் பிடித்தது. இதனால் பக்தர்களிடையே பயவுணர்வு நிலவி வருகிறது.

இந்தத் தீ விபத்துகளால் நாட்டில் ஏதும் பெரும் கலவரம், இயற்கைச் சீற்றம், ஆட்சி மாற்றம், தலைவர்கள் உயிருக்கு ஆபத்து என ஏற்படுமோ என்று பக்தர்களிடையே பயம் நிலவி வருகிறது. இதனால் பெண்கள் பலர் வீட்டு வாசல்களில் விளக்கேற்றியும் குல தெய்வக் கோவில்களுக்குச் சென்று பரிகார பூஜைகளையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் குடந்தையில் மாசி மகத் திருவிழா கும்பகோணம் பகுதியி உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மகாமகம் தொடர்புடைய ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் கடந்த 13 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. உணவுப் பொருள்கள் செய்யும் இடத்தில் சிலிண்டரில் பற்றிய தீயை அங்கிருந்தோர் உடனே அணைத்தனர்.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

கும்பகோணம் அருகே சத்திரம் கருப்பூர் சாலையில் அமைந்துள்ளது, மகாமகத் திருவிழா தொடர்புடைய கோவில்களில் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில். இந்தக் கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. திருப்பனந்தாள் மடத்துக்கு சொந்தமான இந்தக் கோவிலின் சுந்தரேச குருக்கள் பூஜை செய்து வருகிறார். இன்று வழக்கம் போல் காலை கோவிலுக்கு வந்த அவர் சுவாமிக்கு நித்ய பூஜைகளை நடத்தி விட்டு, மதியம் 12 மணி அளவில் கருவறையில் பூஜைகளை முடித்து விட்டுத் திரும்பினார். அப்போது அருகில் எரிந்து கொண்டிருந்த குத்துவிளக்கு சரிந்து, அதில் இருந்து சிதறிய எண்ணெய் சுவாமி விக்ரஹத்தின் மீது பட்டு, பெருமானுக்கு சாற்றப் பட்டிருந்த வஸ்திரத்தில் தீப் பிடித்தது.

இதைக் கண்டு பதறிய குருக்கள் வெளியில் ஓடிவந்தார். தீயை அணைக்க தண்ணீர் எடுத்து வர ஓடினார். அவர் வருவதற்குள் தீ மளமளவெனப் பற்றியது. அது கருவறையில் திறந்திருந்த பீரோவில் அம்மனுக்கு சாத்துவதற்காக அடுக்கி வைக்கப் பட்டிருந்த புடவைகளிலும் பற்றியது. இதனால் அச்சமடைந்த குருக்கள் சுந்தரேசன் தீ விபத்து பற்றி கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்களிடம் தெரிவித்தார். அவர்கள் உடனடியாக கும்பகோணம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் நிலைய தீயணைப்பு அலுவலர் முத்துக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி மேலும் தீ பரவாமல் தடுத்தனர்

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

இந்தத் தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட பட்டுப்புடவைகள், வேட்டிகள், நகைகள், திருவாசி, சுவாமி மற்றும் அம்மனுக்கு சாத்தப் படும் பித்தளைப் பொருட்களான கவசங்கள், கற்பூர தாம்பாளங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது தெரியவந்தது. கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடரும் ஆலய தீவிபத்துகள், பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அசம்பாவித சம்பவத்தால் அச்சமடைந்த பக்தர்கள் சிலர், சனீஸ்வரர் சன்னிதியில் எள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories