சென்னை: ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து பாதிரியார் பிரேம்குமார் இருந்து மீட்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…. பாதிரியார் பிரேம்குமார் கடத்தப்பட்டதால், கடந்த 8 மாதங்களாக அவரது குடும்பத்தினர் பட்ட மிகப்பெரிய துயரத்தில் இருந்து மீண்டுள்ளனர். பாதிரியார் மீட்புக்கு, உணர்வு பூர்வமாக நடவடிக்கை எடுத்த பிரதமர் நரேந்திரமோடிக்கும், வெளிவிவகாரத்துறை மந்திரிக்கும் தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் பாதிக்கப்பட்டால், அவர்களை காப்பாற்றுகிற அக்கறையும், அரவணைப்பும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் செயல்பாடும் பிரதமர் மோடியின் மத்திய அரசுக்கு உள்ளது என்பதற்கு பாதிரியார் பிரேம்குமார் விடுதலை ஒரு நல்ல உதாரணமாக அமைந்துள்ளது. என்று கூறியுள்ளார்.
Popular Categories