ராஜபாளையத்தில் வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி..

IMG 20230123 WA0085 - 2026

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்ந்த திட்டங்களை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர் ஆய்வு செய்து விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர் சமயமூர்த்தி ஐஏஎஸ் இராஜபாளையம் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள் சம்பந்தமான ஆய்விற்கு வந்திருந்தார்.
உடன் தலைமை செயல் பொறியாளர் டாக்டர் ஆர் முருகேசன் வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்ட ராமன் வேளாண்மை துணை இயக்குநர் மாவட்ட ஆட்சியர் நேர்மறை உதவியாளர் சங்கரநாராயணன் வேளாண்மை துணை இயக்குநர் விதை சான்று துறை வனஜா கண்காணிப்பு பொறியாளர் ஜாகிர் உசேன் செயற்பொறியாளர் டெனிஸ்டன் வைத்தியலிங்கம் வேளாண்மை உதவி இயக்குநர் இராஜபாளையம் திருமலைச்சாமி வேளாண்மை உதவி இயக்குநர் விதை சான்று சுப்பராஜ் மற்றும் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை கூட்டுறவுத்துறை ஆகிய துறையில் இருந்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வில் இராஜபாளையம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் 2023-23 கீழ் சோழபுரம் கிராம பஞ்சாயத்தில் விவசாயிகள் ஒருங்கிணைந்து தரிசனத் தொகுப்பு அமைக்கப்பட்டு அதிலுள்ள முட்களையாக அகற்றப்பட்டு அப்பகுதியை சாகுபடிக்கு கொண்டுவரப்படதை.ஆய்வு செய்தார்.

இத்திட்டத்தில் பயனடைந்த விவசாயிகளை சந்தித்து திட்டத்தை குறித்து கலந்துரையாடல் செய்தார்
மேலும் அவர் கூறிய செய்து குறிப்பில் இத்திட்டத்தின் கீழ் 300 குடும்பங்களுக்கு தலா ரெண்டு விதம் 600 தென்னங்கன்றுகளும், 35 விவசாயிகளுக்கு உயிர் உரங்களும் முழு மானியம் ஆகவும் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு 9 விசைத்தெளிப்பான் வழங்கப்படுகிறது எனவும், தரிசு நில தொகுப்பு விவசாயிகள் குழு அமைத்து பதிவு செய்து அதற்கு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து மின் வசதிகளை ஏற்படுத்தி தரப்படுகிறது பின்பு பின்பு அப்பகுதியில் தோட்டக்கலைத் துறையின் மூலமாக சொட்டுநீர் பாசனம் அமைத்து விவசாயிகள் எலுமிச்சை,மா, சீத்தா, கொய்யா, நெல்லி போன்ற பழ மர பல்லாண்டு பயிர்கள் சாகுபடி செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தோட்டக்கலைத் துறை மூலமாக கிராமங்களுக்கு எட்டு காய்கறிகளை கொண்ட விதை பொட்டலங்கள் , ஐந்து பழ மரக்கன்றுகள் மரக்கன்றுகளும் 75% மானியத்திலும் காளான் வளர்ப்புக்கு மானியமும் வழங்கப்படுகின்றன இராஜபாளையம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 12 கிராம பஞ்சாயத்துகளுக்கும் மானியத்தில் வழங்கப்படுகிறது.
என உற்பத்தி ஆணையர் தெரிவித்துள்ளார் .

மேலும் இதற்கான ஏற்பாட்டை முன்னோடி விவசாய திருநாவுக்கரசு மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் தனலட்சுமி சேக் ஒலியுல்லா மற்றும் இதர அலுவலர்கள் செய்திருந்தனர்.

IMG 20230123 WA0082 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories