நெல்லை மண்ணின் மைந்தர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்னவேல் பாண்டியன் காலமானார்

சென்னை:

நெல்லை மண்ணின் மைந்தரும் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான ரத்தினவேல் பாண்டியன் தமது 89ஆம் வயதில் இன்று காலமானார்.

கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், முதுமையின் காரணமாக ஏற்படும் உடல் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் புதன்கிழமை இன்று சென்னை அண்ணாநகர் 6 வது மெயின் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

ரத்தினவேல் பாண்டியனின் மனைவி லலிதா கடந்த 2010 மார்ச் 15ஆம் தேதி காலமாகி விட்டார். இவர்களுக்கு சுப்பையா, ராஜேந்திரன், சேகர், கந்தசாமி, காவேரி மணியன் என 5 மகன்களும் லட்சுமி என்ற மகளும் உள்ளனர். இதில் சுப்பையா சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்.

நெல்லை மாவட்டம் திருப்புடைமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன். 1929-ம் வருடம் பிறந்த இவர், வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார். தனது திறமையின் காரணமாக முன்னேறிய அவர் 1974ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். பின்னர், 1988ம் வருடம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு 1994ல் ஓய்வு பெற்றார்.

நெல்லை மாவட்ட மக்கள் மீது நீங்காத பற்றுக் கொண்டிருந்தார். திருநெல்வேலி மாவட்டத்தின் கலாசாரச் செழுமையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும், அவரது சொந்த ஊரான திருப்புடை மருதூரில் உள்ள சிவாலயத்தை அதே கலைச் சிறப்பு மாறாமல் புதுப்பித்து, சீர் செய்த பெருமை ரத்னவேல் பாணியனுக்கு உண்டு. அவரது நற்பணிகள் பல நெல்லை மாவட்த்தில் இன்றளவும் பேர் சோல்லிக் கொண்டிருக்கின்றன.

நெல்லை மாவட்டத்தில் நடந்த சாதி வன்முறையின்போது அந்தப் பகுதிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்ட ரத்தினவேல் பாண்டியன், `படித்த இளைஞர்களுக்குப் போதிய வேலை வாய்ப்பு இல்லாததன் காரணமாகவே சாதிய மோதல்களில் ஈடுபடுகிறார்கள். அதனால் இந்தப் பகுதியில் அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்’ என அரசுக்கு அறிக்கை கொடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

அமரரான ரத்தினவேல் பாண்டியனின் உடலுக்கு நீதித்துறையினரும் அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories