டிடிவி தினகரனுக்கு ரூ.10 கோடி ‘வந்தது எப்படி’ ? ஜெயக்குமார் கேள்விக்கு ஆதரவாளர்கள் டிவி.,யில் விளக்குவார்களா?

சென்னை:

நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் என்று கூறி புகார் கொடுக்க, தலைமைச் செயலகத்திற்கே வந்து அரசு மீது புழுதி வாரித் தூற்றுவதா என்று அமைச்சர் ஜெயக்குமார் கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஊழல் புகார் கூறும் டிடிவி தினகரனுக்கு ரூ.10 கோடி சொத்து சேர்ந்தது எப்படி என்று அவர் விளக்குவாரா என்றும் கேட்டுள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச் செல்வன் ஆகியோர், இன்று காலை தலைமைச் செயலகத்துக்கு வந்து திடீரென முதல்வர் எடப்பாடியின் உறவினர்கள் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தப் பணிகள் ஏற்றுள்ளார்கள். இதில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது என்று கூறி திடீர் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அவர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, இருவர் பேரிலும் கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டது.

இந்நிலையில், இதுகுறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவரிடம் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் கூறிய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும், டிடிவி தினகரன் பேட்டி குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், எதற்கெடுத்தாலும் கேமரா முன் நிற்பதே டிடிவி தினகரனுக்கு ஃபேஷன் என்றாகி விட்டது. ஊழல் புகார் சொல்பவர்கள், நேரடியாக வந்து சொல்ல வேண்டியதுதானே? வெற்றிவேல், தங்க தமிழ்செல்வனை மாட்டி விடுவதா? யாரையாவது மாட்டி விடுவதே டிடிவி தினகரனுக்கு வேலையாகிவிட்டது. தலைமைச் செயலகம் என்பது இதயம் போன்ற பகுதி. மக்கள் தங்களின் குறைகளை சுமந்து கொண்டு அங்கு வருவார்கள். அங்கு வந்து அரசு மீது புழுதிவாரித் தூற்றுவதா?

இவ்வளவு பேசும் தினகரனுக்கு ரூ. 10 கோடிக்கு சொத்து வந்தது எப்படி என்று சொல்ல முடியுமா? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார் அமைச்சர் ஜெயக்குமார்.

இதைக் கேட்ட அருகில் இருந்த சிலர், ரூ. 10 கோடி சொத்து வந்தது எப்படி என்றும் ஊடகங்களிடம் விளக்கம் கொடுக்க தங்க தமிழ்ச்செல்வனும் வெற்றிவேலும் வரட்டுமே என்று கூறினர்.

முன்னதாக, கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடுவதை அடுத்து இருவரும் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்பட்டது.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories