‘டெய்லி லேட்’: கூடுவாஞ்சேரியில் மின்சார ரயிலை மறித்து போராட்டம்!

Published:

chennai trains - 2026

சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் மின்சார ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் நடத்தினர்.

சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் மின்சார ரயிலை மறித்து 100க்கும் மேற்பட்ட பயணிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தினமும் 30 நிமிடம் தாமதமாக ரயில் வருவதாகக் கூறி செங்கல்பட்டு-சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற ரயிலை மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

முன்னர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் ரயில்கள் குறைந்த நேரமே நின்று செல்வதால், அதிகம் பயணிகள் ஏறி இறங்குவதில் சிரமத்தை அனுபவித்தனர். ஒரு முறை பெண் பயணி ஒருவர், அவசரத்தில் இறங்கும் போது ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். அப்போது பயணிகள் இதே போல் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதை அடுத்து, கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் கூடுதலாக  2 நிமிடங்கள் ரயில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப் பட்டது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img