நேற்று ஏர்டெல்; இன்று வோடபோன்: சிக்னல் பிரச்னையில் சிக்கித் தடுமாறும் வாடிக்கையாளர்கள்!

Published:

idea airtel vodafone jio - 2026

சென்னை: வோடபோன் சிக்னல் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் சிக்னல் கிடைக்காததால், வாடிக்கையாளர்கள் வேறு எவருக்கும் கால் செய்யவோ, அழைப்புகளைப் பெறவோ இயலாத படி பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

நேற்று ஏர்டெல் செல்போன் வாடிக்கையாளர்கள் இதே சிரமத்தைச் சந்தித்தனர். எவருக்கும் அழைப்புகள் செல்லவில்லை, அழைப்புகளும் வரவில்லை. இதனால் மற்றவர்களைத் தொடர்பு கொள்ள இயலாமல் பலரும் தவித்தனர்.

முன்னர் ஜியோ போனுக்கும் இதே போன்ற பிரச்னை ஏற்பட்டது. பின்னர் தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப் பட்டு, வாய்ஸ் கால் சேவை மீண்டும் தொடங்கியது. நேற்றும் ஏர்டெல் சேவை மாலை நேரத்தில் படிப்படியாக சீரானது. இன்று அது போல் தொழில்நுட்பக் கோளாறால் வோடபோன் வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img