அறிவாலயம் வந்த கருணாநிதி: அவைக்கு அழைத்து வராதது ஏனோ?

karunanidhi arivalayam - 2026

சென்னை: திமுக., தலைவர் மு.கருணாநிதி கிட்டத்தட்ட மூன்று மாத இடைவெளியில் மீண்டும், ஞாயிற்றுக் கிழமை நேற்று அண்ணா அறிவாலயம் வந்தது, கழகத் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

உடல்நலக் குறைவால், கடந்த இரு ஆண்டுகளாக தனது கோபாலபுரம் இல்லத்திலேயே ஓய்வெடுத்து வருகிறார் திமுக., தலைவர் மு.கருணாநிதி. உடல் நல பாதிப்பு ஏற்படும் போது, அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிடுவார். இந்நிலையில், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அவர் செயல் திறனுடன் இருப்பதை தொண்டர்களுக்கு உணர்த்தும் வகையில், அவ்வப்போது சில வீடியோக்கள் பரபரப்பாக வெளியிடப்படும். அண்மையில் மு.க.தமிழரசுவின் பேரனைப் பார்த்து கருணாநிதி சிரிக்கும் வீடியோவும், பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவும் இணையத்தில் வைரலாகப் பரவியது.

மேலும், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், அண்மையில் கட்சி தொடங்கிய கமல், கட்சி தொடங்குவதற்காகக் கூறிவரும் ரஜினி என பலரும் கருணாநிதியை சந்தித்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். பிரதமர் மோடியும் கூட கருணாநிதியின் இல்லத்துக்கு வந்து அவரை சந்தித்து, அதனை முன்னிட்டு கருணாநிதி தொண்டர்களுடன் உற்சாகமாக இருக்கும் புகைப்படங்களும் வெளி வந்தன. இதனிடையே, சில மாதங்களுக்கு முன் கருணாநிதி முரசொலி அலுவலகத்துக்குச் சென்று அங்கே அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டார். மேலும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அண்ணா அறிவாலயத்துக்கு திடீரென வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், மு.கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு கோபாலபுரம் இல்லத்திலிருந்து கிளம்பி அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரை முருகன், பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர். ஓய்வில் இருக்கும் கருணாநிதி இரண்டாவது முறையாக அண்ணா அறிவாலயத்துக்கு வந்ததால், தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அண்ணா அறிவாலயத்தில் சிறிது நேரம் இருந்த கருணாநிதி மீண்டும் கோபாலபுரம் இல்லத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், இது குறித்த புகைப்படங்களும் செய்திகளும் நேற்று இரவு இணையத்தில் பரப்பப் பட்டது. சமூக வலைதளங்களில் இவற்றைப் பகிர்ந்த சிலர், இவ்வளவு ஆக்டிவ்வாக இருக்கும் தலைவரை அப்படியே சட்டசபைக்கும் கூட்டிட்டு வாங்களேன் என்று கருத்து பதிவிட்டிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories