January 26, 2025, 5:47 PM
28.9 C
Chennai

அறிவாலயம் வந்த கருணாநிதி: அவைக்கு அழைத்து வராதது ஏனோ?

சென்னை: திமுக., தலைவர் மு.கருணாநிதி கிட்டத்தட்ட மூன்று மாத இடைவெளியில் மீண்டும், ஞாயிற்றுக் கிழமை நேற்று அண்ணா அறிவாலயம் வந்தது, கழகத் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

உடல்நலக் குறைவால், கடந்த இரு ஆண்டுகளாக தனது கோபாலபுரம் இல்லத்திலேயே ஓய்வெடுத்து வருகிறார் திமுக., தலைவர் மு.கருணாநிதி. உடல் நல பாதிப்பு ஏற்படும் போது, அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிடுவார். இந்நிலையில், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அவர் செயல் திறனுடன் இருப்பதை தொண்டர்களுக்கு உணர்த்தும் வகையில், அவ்வப்போது சில வீடியோக்கள் பரபரப்பாக வெளியிடப்படும். அண்மையில் மு.க.தமிழரசுவின் பேரனைப் பார்த்து கருணாநிதி சிரிக்கும் வீடியோவும், பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவும் இணையத்தில் வைரலாகப் பரவியது.

மேலும், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், அண்மையில் கட்சி தொடங்கிய கமல், கட்சி தொடங்குவதற்காகக் கூறிவரும் ரஜினி என பலரும் கருணாநிதியை சந்தித்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். பிரதமர் மோடியும் கூட கருணாநிதியின் இல்லத்துக்கு வந்து அவரை சந்தித்து, அதனை முன்னிட்டு கருணாநிதி தொண்டர்களுடன் உற்சாகமாக இருக்கும் புகைப்படங்களும் வெளி வந்தன. இதனிடையே, சில மாதங்களுக்கு முன் கருணாநிதி முரசொலி அலுவலகத்துக்குச் சென்று அங்கே அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டார். மேலும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அண்ணா அறிவாலயத்துக்கு திடீரென வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், மு.கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு கோபாலபுரம் இல்லத்திலிருந்து கிளம்பி அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரை முருகன், பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர். ஓய்வில் இருக்கும் கருணாநிதி இரண்டாவது முறையாக அண்ணா அறிவாலயத்துக்கு வந்ததால், தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அண்ணா அறிவாலயத்தில் சிறிது நேரம் இருந்த கருணாநிதி மீண்டும் கோபாலபுரம் இல்லத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

ALSO READ:  அரசியலமைப்பின் 75ம் ஆண்டு நிறைவு நாளில் பெருமிதம்; மனதின் குரலில் பிரதமர் மோடி!

இந்நிலையில், இது குறித்த புகைப்படங்களும் செய்திகளும் நேற்று இரவு இணையத்தில் பரப்பப் பட்டது. சமூக வலைதளங்களில் இவற்றைப் பகிர்ந்த சிலர், இவ்வளவு ஆக்டிவ்வாக இருக்கும் தலைவரை அப்படியே சட்டசபைக்கும் கூட்டிட்டு வாங்களேன் என்று கருத்து பதிவிட்டிருந்தனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IND Vs ENG T20: 2வது போட்டியிலும் இந்திய அணி த்ரில் வெற்றி

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டி-20 ஆட்டம்- சென்னை-25 ஜனவரி 2025இரண்டாவதிலும் வெற்றிமுனைவர்...

Padma Awards 2025

Padma Awards - one of the highest civilian Awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri.

தமிழகத்தைப் பற்றிய கவலைகள்; ஒட்டுமொத்தமாக வெளியிட்ட ஆளுநர் ரவி!

தமிழகத்தைப் பற்றிய பல்வேறு கவலைகளை வெளியிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் எதிர்காலம் சார்ந்து அவர் வெளியிட்ட கவலைகள் பெரும் கவனத்துக்கு உரியவை.

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று