அறிவாலயம் வந்த கருணாநிதி: அவைக்கு அழைத்து வராதது ஏனோ?

karunanidhi arivalayam - 2026

சென்னை: திமுக., தலைவர் மு.கருணாநிதி கிட்டத்தட்ட மூன்று மாத இடைவெளியில் மீண்டும், ஞாயிற்றுக் கிழமை நேற்று அண்ணா அறிவாலயம் வந்தது, கழகத் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

உடல்நலக் குறைவால், கடந்த இரு ஆண்டுகளாக தனது கோபாலபுரம் இல்லத்திலேயே ஓய்வெடுத்து வருகிறார் திமுக., தலைவர் மு.கருணாநிதி. உடல் நல பாதிப்பு ஏற்படும் போது, அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிடுவார். இந்நிலையில், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அவர் செயல் திறனுடன் இருப்பதை தொண்டர்களுக்கு உணர்த்தும் வகையில், அவ்வப்போது சில வீடியோக்கள் பரபரப்பாக வெளியிடப்படும். அண்மையில் மு.க.தமிழரசுவின் பேரனைப் பார்த்து கருணாநிதி சிரிக்கும் வீடியோவும், பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவும் இணையத்தில் வைரலாகப் பரவியது.

மேலும், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், அண்மையில் கட்சி தொடங்கிய கமல், கட்சி தொடங்குவதற்காகக் கூறிவரும் ரஜினி என பலரும் கருணாநிதியை சந்தித்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். பிரதமர் மோடியும் கூட கருணாநிதியின் இல்லத்துக்கு வந்து அவரை சந்தித்து, அதனை முன்னிட்டு கருணாநிதி தொண்டர்களுடன் உற்சாகமாக இருக்கும் புகைப்படங்களும் வெளி வந்தன. இதனிடையே, சில மாதங்களுக்கு முன் கருணாநிதி முரசொலி அலுவலகத்துக்குச் சென்று அங்கே அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டார். மேலும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அண்ணா அறிவாலயத்துக்கு திடீரென வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், மு.கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு கோபாலபுரம் இல்லத்திலிருந்து கிளம்பி அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரை முருகன், பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர். ஓய்வில் இருக்கும் கருணாநிதி இரண்டாவது முறையாக அண்ணா அறிவாலயத்துக்கு வந்ததால், தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அண்ணா அறிவாலயத்தில் சிறிது நேரம் இருந்த கருணாநிதி மீண்டும் கோபாலபுரம் இல்லத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

இந்நிலையில், இது குறித்த புகைப்படங்களும் செய்திகளும் நேற்று இரவு இணையத்தில் பரப்பப் பட்டது. சமூக வலைதளங்களில் இவற்றைப் பகிர்ந்த சிலர், இவ்வளவு ஆக்டிவ்வாக இருக்கும் தலைவரை அப்படியே சட்டசபைக்கும் கூட்டிட்டு வாங்களேன் என்று கருத்து பதிவிட்டிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories