அய்யா வைகுண்டர் பீடத்தை கையகப்படுத்த அறநிலையத்துறை முயற்சி: ஹெச்.ராஜா கண்டனம்!

aiya vaikundar - 2026

அய்யா வைகுண்டர் பீடத்தை இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் தனது எதிர்ப்பினைப் பதிவிட்டுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா. அவர் அதில், ஏற்கெனவே தமிழக அரசு கையகப்படுத்தியுள்ள 38635 இந்துக் கோவில்களில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் பராமரிப்பின்றி அழிக்கப்பட்டுள்ள நிலையில் அய்யா வைகுண்டர் அவர்கள் பீடத்தை அரசு கையகப்படுத்த முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது… என்று கூறியுள்ளார்.

அவரது ட்வீட்

 

இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் குமரி மாவட்டம், சாமித்தோப்பு தலைமைபதி அருகே இது தொடர்பாக அரசுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டமும் நடைபெற்றது.

தமிழகத்தில் பல இடங்களில் அய்யா வைகுண்டர் வழிக் கோயில்கள் உள்ளன. இந்த அய்யாவழிக் கோயில்கள் கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு அய்யா வைகுண்டரின் நினைவிடத்தை தலைமையிடமாகக் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இதனை இந்து சமய அறநிலையத்துறையில் இணைப்பதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அய்யா வைகுண்டர் தலைமைப் பதியின் பால பிரஜாபதி அடிகளார் தலமையில் சாமித்தோப்பு தலைமை பதி முன்பு உண்ணாவிரதப் போரட்டம் நடத்தப் பட்டது. இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளிலிருந்து பலர் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை தமிழக அரசுக்கு தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்து கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories