பாமக.,வின் ரயில் மறியல் போராட்டம்; மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்ட இளைஞர்!

pmk youth electricity train - 2026

காவிரி விவகாரத்தில் பாமக., இன்று போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. இந்தப் போராட்டங்களின் ஒரு பகுதியாக, திண்டிவனத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது, ரயில் மீது ஏறிய பாமக தொண்டர் ரஞ்சித், மின்சாரம் தாக்கி நடைமேடையில் தூக்கி வீசப்பட்டார்.

ரயில் இன்சின் மீது ஏறி, மின்கம்பி மேலே செல்லும் போது அறியாமல் அதைத் தொட்டதால், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ரஞ்சித் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்  பட்டுள்ளார்.

railway electric pmk youth - 2026

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை எழும்பூரில் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார்.  ஈரோடு, மதுரை, திருச்சி, தர்மபுரி, ஆம்பூர், அரியலூர் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.

அது போல், வேலூர் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட முயன்ற பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் புதிய ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட திரளான பா.ம.க.வினர் குவிந்தனர். இதனால் அந்தப் பகுதியில் காலையிலேயே போலீசார் குவிக்கப் பட்டனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

காவிரி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து பா.ம.க. மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் பொது வேலை நிறுத்தத்தையொட்டி காஞ்சிபுரத்தில் வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனால் வாழப்பாடியில் 2,500 கடைகள் மூடப்பட்டுள்ளது.i அயோத்தியா பட்டினம், திருமானூர், பேளூர், தும்பல், கருமந்துறை உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories