January 20, 2025, 5:54 PM
26.2 C
Chennai

சென்னை உயர் நீதிமன்றத்தில் இ-கோர்ட் கட்டண முறை அறிமுகம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் இ-கோர்ட் கட்டண முறை அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

வழக்கு தொடுப்பவர் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு தங்கள் கட்டணத்தை இணையதளத்தில் செலுத்துவதற்கேற்ப இ கோர்ட் கட்டண முறையை சென்னை உயர்நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் இவ்வசதி முதல் கட்டமாக உயர் நீதிமன்றத்தின் சென்னை முதன்மை அமர்வுக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் அமர்வுக்கும் வழங்கப் படுகிறது.

ஸ்டாம்ப் பேப்பர் எனப்படும் முத்திரைத்தாள் மூலம் வழக்குகளுக்கான நீதிமன்ற கட்டணம் செலுத்தும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதற்கு மாற்றாக, இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் நீதிமன்றக் கட்டணம் செலுத்தும் இ-ஸ்டாம்ப் எனப்படும் மின்னணு முத்திரைத்தாள் முறை சென்னை உயர்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொண்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இ-ஸ்டாம்ப் முறையை இந்திரா பானர்ஜியும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இ-ஸ்டாம்ப் முறையை எடப்பாடி பழனிசாமியும் தொடங்கி வைத்தனர்.

ALSO READ:  லகு ரக வாகன உரிமம் வைத்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது.

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம்

முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

திருச்செந்தூரில் முருக பக்தர்களை திமுக., அமைச்சர் சேகர்பாபு அவமதித்த விவகாரத்தில், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த அமைப்பின்

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...