தீர்ப்பு எப்போ வழங்குறதுன்னு எங்களுக்கு தெரியும்: கண்ணாமூச்சி காட்டிய நபர்; கடுப்பான நீதிபதி!

Madras High Court in Chennai - 2026

சென்னை: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் தலைமை நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நீதிபதிகள் கடுப்பாகி, அந்த நபரை வெளியேற்ற உத்தரவிட்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு பிறப்பிக்கிறது.

இந்நிலையில் தினகரன் ஆதரவாளர்கள் 18 பேர் தகுதி நீக்கத்தால் தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மனுதாரர் தேவராஜன் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் முதலில் தீர்ப்பு வழங்க வேண்டும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கக் கூடாது என அவர் முறையீடு செய்தார். தேவராஜன் முறையீட்டை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு அளிக்கும் வரை ஓபிஎஸ் வழக்கில் தீர்ப்பு தரக்கூடாது என தேவராஜன் முறையீடு செய்தார். அப்போது 11 பெரிதா? 18 பெரிதா? என்று தலைமை நீதிபதியிடம் கேள்வி எழுப்பிய அவர், முதலில் 18 எம்எல்ஏக்கள் வழக்கில் முதலில் தீர்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தேவராஜனின் இந்த நடவடிக்கைக்கு தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். எம்எல்ஏக்கள் வழக்கில் எப்போது தீர்ப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்திற்கு தெரியும் என்றார். ஆனாலும் தொடர்ந்து வாக்குவாதம் செய்தார் தேவராஜன். அப்போது வழக்கிற்கு தொடர்பில்லாத ஒருவர் நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதை ஏற்க முடியாது என்று நீதிபதி கூறினார். இருப்பினும் தேவராஜன், தான் ஒன்றும் தீவிரவாதியில்லை என்றும் வாக்காளர் என்ற முறையில் முறையிட்டதாகவும் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த தலைமை நீதிபதி சிஎஸ்எப்ஐ வீரர்களை அழைத்து தேவராஜனை வெளியேற்ற உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன. 

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories