நெல்லை கோயில் அதிர்ச்சி; சுவாமி அம்பாள் உத்ஸவ மூர்த்தி நகைகள் எங்கே?: அன்பர்கள் கேள்வி!

nellaiappar gandhimathiamman1 - 2026

நெல்லை: தமிழகத்தில் உள்ள சிவ ஆலயங்கள் பலவற்றில் மிகவும் சிறப்புடைய தாகவும் தனித்தன்மை கொண்டதாகவும் திகழ்வது திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில். பாடல் பெற்ற தலம். புராதனமான தலம். மன்னர்கள் பலர் திருப்பணிகள் செய்த பிரமாண்ட தலம். திருநெல்வேலி ஊரே, நெல்லையப்பரை மையமாகக் கொண்டே திகழ்கிறது.

விவசாயத்துக்கும் நெல்லையப்பருக்கும் பெரும் தொடர்பு உண்டு. நெல்லுக்கு வேலியிட்ட பிரான், மழையில் இருந்து விவசாயியின் விதை நெல்லைக் காத்த பிரான் என்றெல்லாம் வணங்கப் பட்டாலும், இங்கே விளைந்து கதிர் அறுத்து நெல்லை மரக்காலில் இட்டு அளக்கும் போது, நெல்லையப்பருக்கும் காந்திமதிக்கும் முதல் மரக்கால் நெல் அளக்கப்படும். தாமிரபரணி நதி நீர் விவசாயத்துக்கு மட்டுமேயாக இருந்த காலங்களில் செழிப்புடன் இருந்த நெல்லை மாவட்டம் இப்போது தடுமாறுகிறது. பயிர் செழிக்கத் தந்த நெல்லையப்பருக்கு பயபக்தியுடன் நெல்லை திருப்பி அளித்த விவசாயிகளுக்கு இன்று நெருக்கடி. காரணம், ஆலயத்தை அவலமாக வைத்திருப்பது என்று குற்றம் சாட்டுகின்றனர் பக்த சபையினர்.

ALSO READ:  இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

இந்தக் கோயிலுக்கு இறையிலி நிலங்கள் பல உண்டு. குறிப்பாக ஆபரணங்கள். அருகில் இருக்கும் மற்ற புகழ்பெற்ற தலங்களிலும் உத்ஸவருக்கு நகைகள் அணிவிக்கிறார்கள். பொதுவான விழாக்காலங்களில் உத்ஸவ விக்ரஹங்களுக்கு நகைகள் அணிவித்து இறைவனுக்கு சமர்ப்பிப்பது வழக்கம். ஆனால், எல்லா வசதிகளும் இருந்தும், வெகு காலமாகவே நெல்லையப்பர் காந்திமதி அம்மன் சுவாமிகளுக்கு நகைகள் அணிவிப்பதில்லை என்று குற்றம் சாட்டுகின்றார்கள் பக்தர்கள்.

nellaiappar gandhimathiamman - 2026

இது குறித்து பக்தர்கள் எழுப்பியுள்ள கேள்விகள்…

திக்கெலாம் புகழும் திருநெல்வேலியுறை செல்வர்…. ஆனால் அவருக்கு அணிவிப்பதோ ஒற்றை பவள மாலை!

ஐந்து கோடி பொருட்செலவில் கும்பாபிஷேகம் நடந்தது நெல்லையருக்காகவா ? இல்லை திருடுவதற்காகவா?

தங்கமும் வைரமும் இழைத்த நகைகள் இருக்கின்றனவா அல்லது திருடப்பட்டுவிட்டதா?

1992ல் இருந்து நகைகளை அம்மையப்பரும் அணிந்து காணவில்லை, அவர்களுக்கு அணிவித்து பக்தர்களும் கண்டதில்லை.

அறநிலையத் துறை திருடித் தின்னத்தான் நகைகளை சாற்றவில்லையா?

முன்னாள் டிரஸ்டி செல்லையா பிள்ளை சாற்றிய சுவாமி வெள்ளி அங்கியோ, கைங்கர்ய சபா செய்த தஙகக் காசு மாலை மற்றும் அம்பாள் வெள்ளி அங்கியோ என… எந்த ஆபரணமும் சாற்றப்படாதது ஏன்?

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

உள் கோவில் திருவிழாவான வசந்த திருவிழாவிற்கும் நகை சாற்றாதது ஏன்?

கோடீஸ்வரி காந்திமதி அம்மா இப்படி ஒற்றைச் சங்கிலியுடன் வருவது ஏன்?

உண்மையான நகைகள் இருக்கிறதா இல்லை திருடப்பட்டுவிட்டதா?

1974ல் பொதுமக்களிடம் கணக்கு காண்பிக்கப்பட்டதைப் போல் ஏன் இன்று செய்யப்படவில்லை..? அறநிலையத் துறையின் திருட்டு வெளிப்பட்டுவிடும் என்ற அச்சமா? – என்று கேள்வி எழுப்பி வருகின்றார்கள் பக்தர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories