புகார் கொடுக்க வந்த பெண்ணை மடக்கி தனிமையில் இருந்த போலீஸ் ஏட்டு வீடியோ: 5 பேர் மீது வழக்கு பதிவு

ps pcm natarajan1 - 2026

நெல்லை: புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் செல்போன் எண் பெற்று, அவரை மிரட்டி தன் வீட்டுக்கு வரச் செய்து, தனிமையில் இருந்த போலீஸ் ஏட்டு குறித்து வீடியோ எடுத்து முகநூல் உள்ளிட்ட சமூகத் தளங்களில் பதிவிட்ட 5 பேர் மீது ஏழு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன். 40 வயதான இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர், பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணி புரிகிறார். இவர், பாவூர்சத்திரம் அருகே ராஜேஸ்வரி நகரில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார்.

இவர், காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பெண்களை ஆள் பார்த்து அவர்களிடம் செல்போன் எண் பெற்றுக் கொள்வாராம். அவர்களை பின்னர் தொடர்பு கொண்டு, வழக்கு விஷயமாகப் பேசுவதாகக் கூறி, கொஞ்சம் கடலை போட்டு, வழிக்குக் கொண்டு வருவாராம். பின்னர், தனது வீட்டுக்கு வரச் சொல்லி தனிமையில் இருப்பார் என்கிறார்கள்.

இவ்வாறு 50க்கும் மேற்பட்ட பெண்கள் அவரது வீட்டுக்கு வந்து செல்வதைக் கண்டு கொதிப்படைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், இவரைக் கையும் களவுமாகப் பிடிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ஒரு வழக்கில் புகார் அளிக்க வந்த கடையம், புலவனுாரைச் சேர்ந்த பாரதி (வயது 32) என்ற பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து தனிமையில் இருந்த போது, அவரது வீட்டு காலிங் பெல் அழுத்தி, நடராஜன் கதவைத் திறந்ததும் உள்ளே சென்று அவர்கள் இருந்த கோலத்தை செல்போனில் படம் பிடித்துள்ளனர் சிலர்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

நடராஜனையும் அந்தப் பெண்ணையும் ஆபாசமாகத் திட்டிய அவர்கள், அரைகுறை ஆடையுடன் அவர்கள் இருவரும் தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சியும் விடாமல் வீடியோ பதிவு செய்து, அந்தக் காட்சிகளை பேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் பரவ விட்டனர்.

இதை அடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற ஆய்வாளர் தனலட்சுமி, இருவரையும் மீட்டுச் சென்றார். விசாரணைக்குப் பின்னர் ஏட்டு நடராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதன் பின்னர் புலவனுார் பாரதி அளித்த புகாரின் பேரில், இருவரும் தனிமையில் இருந்த போது, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து தகராறு செய்து படம் பிடித்த, அன்பழகன், அருண், பரமசிவன், ஆறுமுகபாண்டி, செந்தில்குமார் ஆகியோர் மீது, பிரிவுகள் 294 பி அவமானமாக திட்டுதல், 342 பெண்ணை அறையில் அடைத்து வைத்தல், 447 வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், 354 பெண்ணை மானபங்க படுத்துதல், 506 (2) மிரட்டுதல், (ஆபாச வீடியோவை முகநூலில் பரப்பியதற்காக) தகவல் தொழில்நுட்பப் பிரிவு 67 உள்ளிட்ட 7 பிரிவுகளில் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ALSO READ:  திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

Entertainment News

Popular Categories