இளம் பெண்ணோடு தனியறையில் இருந்த காவலர் சஸ்பெண்ட் நெல்லை எஸ்.பி.,நடவடிக்கை

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் காவல் நிலையத்தை சேர்ந்த ஏட்டு ஒருவர் இரவில் ஒரு பெண்ணுடன் தனியறையில் பேசிக்கொண்டிருந்த போது அவர்களை சிலர் எச்சரிப்பது போன்ற வீடியோ போன்ற வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 15க்கும் மேற்பட்டோர் மீது 9 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது மற்றும் 15 பேர் வழக்குப்பதிவுக்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து அவர்களது உறவினர்கள் காவல் நிலையத்தில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் நடராஜன். இவர் கீழப்பாவூரில் ராஜேஸ்வரி நகரில் பணி நிமித்தமாக தனியாக வீடு எடுத்து அங்கே தங்கியிருந்து வருகிறார்
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் இவரது வீட்டிற்கு வந்த பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் தனியறையில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் சிலர் உள்ளே சென்று ஏட்டு நடராஜனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபபட்டுள்ளனர்.
இதனை சிலர் தங்களது செல்போனில் பதிவு செய்து வாட்ஸ்அப் மூலம் பிறருக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதை பலரும் சமூக வலைதளங்களில் பரவ விட வைரலாக பரவியது. சம்பவம் அறிந்து அங்கு வந்த பாவூர்சத்திரம் போலீசார் ஏட்டு நடராஜன் மற்றும் அந்த இளம் பெண்ணை மீட்டு பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இதுபற்றி ஆலங்குளம் டிஎஸ்பி ரமேசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் வந்து இருவரிடம் விசாரனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குறும்பலாப்பேரி, ஆவுடையானூரை சேர்ந்த 15 பேர் மீது இளம் பெண்ணை அவதுறாக பேசியது, கொலைமிரட்டல் விடுத்தல், வீட்டிற்கு அத்து மீறி நுழைந்தது உட்பட 9 பிரிவுகளில் பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

pc - 2026
மேலும் இச்சம்பவம் தொடர்பாக குறும்பலாப்பேரி பூபாலசமுத்திரம் தெருவை சேர்ந்த ஜெயகாந்தன் (47) மற்றும் அதே தெருவை சேர்ந்த சுடலைமாடன் (65) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் கிடைக்காததால் அவர்களின் குடும்பத்தினரை பாவூர்சத்திரம் போலீசார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தை முற்றுகையிட இருப்பதாகவும் நெல்லை & தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்ய இருப்பதாகவும் தகவல் பரவியதால் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட தலைமை காவலர் நடராஜனை சஸ்பெண்ட் செய்து நெல்லை மாவட்ட எஸ்பி அருண்சக்தி குமார் உத்தரவிட்டார்
மேலும் இந்த வழக்கில் தொடர்புடடையவர்கள் கிடைக்காததால் அவர்கள் குடும்பத்தினர் போலீசார் விசாரணைக்கு வருமாறு அழைத்ததால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இதுபற்றி தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன்னிடம் இந்த வழக்கில் சம்பந்தமில்லாதவர்களை போலீசார் கைது செய்யக்கூடாது என்று கூறி ஆண்கள் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் திரண்டு புகார் தெரிவித்தனர்.
எம்.எல்.ஏ., ஆலங்குளம் டிஎஸ்பி ரமேஷ், ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் மற்றும் பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் பாவூர்சத்திரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories