மர்ம நபர்கள் டீக்கடைக்குள் புகுந்து தாக்குதல்; பெண்கள் இருவர் உயிரிழப்பு

murder - 2026

அடையாளம் தெரியாத நபர்கள் டீ கடைக்குள் புகுந்து கத்தியால் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்தனர்.

சாகுல் ஹமீது என்பவர், திண்டுக்கல் யூசுப்பியா நகர் பகுதியில் தேனீர்க்கடை நடத்தி வருகிறார். அவருடன், மனைவி பரக்கத் நிஷா, தங்கை கொலுசா பீவி ஆகியோர் கடையில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல், கடையில் இருந்த மூன்று பேரையும் சரமாரியாக கத்தியால் குத்தியது. வழியில் தேனீர் அருந்தியபடி நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவர் பிரவீன் என்பவரையும் கழுத்தில் கத்தியால் தாக்கிவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றது.

கத்திக் குத்தினால் காயமடைந்த நான்கு பேரையும், அப்பகுதியில் நின்றிருந்த மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, சாகுல் ஹமீதின் மனைவி பரக்கத் நிஷா, தங்கை கொலுசா பீவி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கத்தியால் குத்திவிட்டு தப்பிய கும்பலை தேடி வருகின்றனர். இதனிடையே, சாகுல் ஹமீது மகன் ஷேக் பரீத்தின் மனைவி மதினா பேகம் கடந்த மாதம் உயிரிழந்தது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதினா பேகத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

சாகுல் ஹமீது குடும்பத்தினரே அவரைக் கொன்றிருக்க வேண்டும் என மதினா பேகத்தின் பெற்றோர் புகாரில் தெரிவித்திருப்பதும் தற்போதைய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால், தாக்குதல் நடத்தப்பட்ட போது சாகுல் ஹமீது மகன் ஷேக் பரீத் கடையில் இல்லை.

இந்நிலையில், சாகுல் ஹமீது மருமகள் மதினா பேகத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories