December 5, 2025, 9:35 PM
26.6 C
Chennai

காவிரி பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை

stalin 1 - 2025

சென்னை: காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், திமுக., செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் காவிரி பிரச்னை குறித்து விவாதிக்க ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக., கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்துக்கு ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்பர்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்…

அரசியல் காரணங்களுக்காகவும், தேர்தல் லாபத்திற்காகவும் தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வந்த மத்திய பா.ஜ.க. அரசு, கர்நாடக மாநில தேர்தல் முடிவடைந்த நிலையில், காவிரி நீர் உரிமை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்திருக்கிறது.

நீதிமன்றத்தின் தொடர்ச்சியான கண்டனங்களிலிருந்து தப்பிக்கின்ற வகையில், தனது வரைவுத் திட்ட விவரங்களை சமர்ப்பித்திருக்கும் மத்திய அரசு, அதனை முழுமையாக எப்போது நடைமுறைப்படுத்த போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டு மக்களும், காவிரி டெல்டா விவசாயிகளும் எதிர்பார்ப்பது, நடுவர்மன்றத்தின் இறுதித்தீர்ப்பின் அடிப்படையிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், முழுமையான அதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். அதனை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் கொண்ட மத்திய பா.ஜ.க. அரசு, வாரியத்திற்குப் பதிலாக ஆணையம், குழு என்றெல்லாம் மாற்றுவழிகள் கொண்ட பெயர்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் தக்க பதிலளித்து, காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மாற்றாக எந்த அமைப்பையும் ஏற்க இயலாது என வலியுறுத்த வேண்டிய கடமை, மாநிலத்தை ஆளும் அ.தி. மு.க. அரசுக்கு இருக்கிறது.

தவிடு தின்கிற ராஜாவுக்கு முறம் பிடிக்கின்ற மந்திரிகள் என்பதுபோல, தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசு முன்வைக்கின்ற திட்டங்களையெல்லாம் வரவேற்கும் அ.தி.மு.க. அரசு, காவிரி உரிமை விவகாரத்திலும் தொடர்ந்து இதேபோக்கில் செயல்படாமல், மே 16-ந் தேதி நடைபெறும் விசாரணையில் தனது வாதங்களை அழுத்தமாக எடுத்து வைத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

காவிரி மேலாண்மை வாரியத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற டெல்டா விவசாயிகள், மத்திய அரசின் வரைவுத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், அந்த வரைவுத் திட்டத்துக்கு ஆதரவாக டெல்லியில் கருத்து தெரிவித்த தமிழக சட்ட அமைச்சரின் அறியாமையையும் எள்ளி நகையாடுகின்றனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் தமிழகத்தின் நலனை மனதில் கொண்டு, இனியும் கால அவகாசம் வழங்காமல், முழு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க ஆவன செய்யவேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் கடைசிகட்ட எதிர்பார்ப்பாகும்.

காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் அமைப்பான நடுவர் மன்றம் அமைய, அயராது பாடுபட்டு வெற்றிகண்ட கருணாநிதி வழியில், நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் அம்சங்களை செயல்படுத்துவதற்கு, தி.மு.க. தொடர்ந்து செயல்படும். காவிரி விவகாரத்தில் எவ்வித அரசியல் மாச்சரியங்களுக்கும் இடம்தராமல், தமிழ்நாட்டின் நலன் ஒன்றையே கருத்திற்கொண்டு செயல்படும் வகையில், மேலாண்மை வாரியத்தை அமைக்கச் செய்யவும், சட்ட ரீதியாக அதனை செயல்படுத்தவும், அது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மாநிலத்தின் சார்பில் வலியுறுத்தவும், நாளையே (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தின் அனைத்துக்கட்சிகள், அனைத்து விவசாய அமைப்புகளின் கூட்டத்தை அ.தி.முக. அரசு கூட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன். – என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories