திருச்சியில் நிபா வைரஸ் தாக்குதல்? மருத்துவமனை டீன் என்ன சொல்கிறார்?

04 May 22 Nipah Virus - 2026

திருச்சியில் நிபா வைரஸ் தாக்குதலில் நோயாளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே நிபா வைரஸால் இளைஞர் பாதிக்கப்படவில்லை என திருச்சி மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார்.

திருச்சி மணப்பாறையை அடுத்துள்ள புத்தாநத்தம், மருங்காபுரி தாலுகாவில் உள்ள கார்வாடி கிராமத்திலிருந்து ஒரு மாதத்துக்கு முன் கேரளாவுக்கு சாலை போடும் பணிக்காகச் சென்ற சிலர், கடந்த மே 15 ஆம் தேதி தங்கள் கிராமத்துக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த ராசு என்பவரின் மகன், 22 வயது பெரியசாமி நேற்று காலை உடல்நலம் குன்றிய நிலையில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த பெரியசாமி, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பெரியசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் நிபா வைரஸ் பாதித்துள்ளதாக சந்தேகித்தனர். இதனால் அவரை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில், கார்வாடி கிராமத்தில் கேரளாவில் இருந்து திரும்பிய மற்றவர்களுக்கும் நிபா வைரஸ் காய்ச்சல் பாதித்திருக்குமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களிடம் ஏற்பட்டதால், கார்வாடி கிராமத்தில் மருத்துவ முகாம் ஒன்று நடத்த வேண்டும் என்று அப்பகுயினர் தாலுகா அலுவலகரிடம் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில் நோயாளி பெரியசாமிக்கு நிபா வைரஸ் பாதிப்பில்லை என்றும் திருச்சியில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் திருச்சி அரசு மருத்துவமனை டீன் அனிதா விளக்கம் அளித்துள்ளார். யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories