ஸ்டெர்லைட் ஆலை மூடல் சட்டப்படி செல்லும் என்கிறார் எடப்பாடி; தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு!

sterlite - 2026

சென்னை: சட்ட வல்லுநர்கள், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்றும், அது சட்டப்படி செல்லும் என்றும் கூறியுள்ளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் அதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யவும் சட்டப்பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ.,. விஜயதாரணி கோரினார். இதற்கு பதிலளித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, சட்ட வல்லுநர்கள், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டது; ஸ்டெர்லைட்டை மூட தமிழக அரசு வெளியிட்ட அரசாணை சட்டப்படி செல்லும் என்றார்.

திமுக., ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது தொழிற்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் அளித்த பதிலுரை ஒன்றில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க முயற்சிக்கு 230 ஏக்கர் நிலத்தை வழங்கியதாகக் கூறியதை குறிப்பிட்டுப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த உண்மை வெளியே தெரிந்துவிடக்கூடாது என திமுகவினர் அஞ்சுவதாகக் கூறினார். ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதில் அதிமுக அரசு தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளதாகவும் கூறினார் முதல்வர்.

இந்நிலியில், இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கேவியட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்ததைத் தொடர்ந்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம், உச்சநீதிமன்றத்தை நாடலாம் என கருதப் படுகிறது.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள கேவியட் மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை எதிர்த்து, வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தை அணுகினால் தங்களின் கருத்தையும் கேட்க வேண்டும் என்றும், மாநில அரசின் கருத்துக்களை கேட்காமல் எந்த முடிவையும் மேற்கொள்ள கூடாது என்றும் கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories