வாட்டும் வெயில்! வறுத்தெடுக்கும் வெப்பம்! இயல்புக்கு மாறாக அனலில் தகிக்கும் சென்னை!

Published:

chennai corporation office - 2026

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வழக்கத்தை விட 3 டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் வெய்யில் வாட்டி வருகிறது.

கோடைக்காலத்தைப் போல், அனல் காற்று வீசி வருவதால், மக்கள் பெரிதும் சிரமப் படுகின்றனர். குறிப்பாக வட மாவட்டங்களில் நிலவும் வெப்ப நிலை, மக்களை பெரிதும் வாட்டி வருகிறது. இரவு நேரத்திலும் வெப்பக் காற்று வீசி வருகிறது. இந்நிலையில், அடுத்த இரு நாட்களும் வெய்யிலின் தாக்கம் வட மாவட்டங்களில் இருக்கும் என்றும் வழக்கத்தை விட 3 டிகிரி வெயில் அதிகமாக இருக்கும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருத்தணியில் 103.28 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 102.74 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, கோவை, நீலகிரி உள்ளிட்ட இடங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. தற்போது தமிழகம் முழுவதும் ஆங்காங்கு லேசான மழை பெய்து வருகிறது.

கலவை 2 செ.மீ, எண்ணூர், வால்பாறை, பரங்கிப்பேட்டை, சின்னக்கல்லாறு, நெய்வேலி ஆகிய இடங்களில் 1 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img