ஐஎஸ்ஐஎஸ்., அமைப்புடன் தொடர்புடையவர்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப் படுகிறது: முதல்வர்

Published:

edappadi palanisamy - 2026

சென்னை: ஐஎஸ்ஐஎஸ்., அமைப்புடன் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கூறினார்.

காவல்துறை மானியக் கோரிக்கை மீது முதல்வர் பதில் அளித்தார். அப்போது அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் பேசுகையில்,  சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருவதால் குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் நக்சலைட் ஊடுருவல்கள் தமிழகத்தில் தடுக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவாமல் இருக்கவும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார் முதல்வர்.

தமிழகத்தில் பொது அமைதியை பராமரிப்பதில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்று கூறிய அவர்,  கொள்ளையர்கள், வழிப்பறி செய்வோர், கடத்தல்காரர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

தமிழகத்தை அமைதி பூங்காவாக, காவல்துறையினர் காத்து வருகின்றனர் என்று கூறிய அவர்,  இந்திய அளவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றங்களின் சதவீதம் குறைவாக உள்ளது என்றார்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்து வருகிறது என்பதைக் குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிச்சாமி இந்தாண்டு காவல்துறைக்கு ரு.7,877 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாகவும்,  காவல் துறைக்கு கடந்த 7 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img