பகவானைத் தொடர்ந்து… ஆசிரியை இடமாறுதலுக்கு மாணவர்கள் போராட்டம்!

teacher bhagwan - 2026

அரக்கோணத்தில் ஆசிரியை இடமாறுதலை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஏற்கெனவே பகவான் என்ற ஆசிரியரின் இடமாறுதலுக்கு மாணவர்கள் போராட்டம் நடத்தி இது செய்தியாக ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அரக்கோணம் அருகே அரசு பள்ளி ஆசிரியை பணியிடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரக்கோணத்தை அடுத்துள்ள சேந்தமங்கலத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கே தமிழாசிரியராக பணியாற்றி வந்தவர் விஜயா. இவர் இதே பள்ளியில் 30 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார். இவர் மாணவர்களிடம் மிகவும் அன்பாகவும், இயல்பாகவும் நடந்து கொள்பவர் எனப்படுகிறது. இந்நிலையில் ஆசிரியர் விஜயாவுக்கு பள்ளிக் கல்வித் துறை பணியிட மாறுதலுக்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், தங்கள் தமிழ் ஆசிரியரை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது எனக் கோரி, பள்ளியின் முன்பு வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் நடுவில் திரண்ட மாணவர்கள், ஆசிரியர் பணியிட மாற்றத்தை ரத்து செய்யக் கோரி முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவர்கள், மற்றும் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கை குறித்து உரிய உயர் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து மாணவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு வகுப்புகளுக்குச் சென்றனர்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

bhagavan teacher - 2026

கடந்த காலங்களில், கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் முறைகேடான வகையில் பணம் சேர்க்க, இவ்வாறு ஆசிரியர்களை பணி இட மாறுதல் செய்து, அந்த இட மாறுதலை ரத்து செய்ய லஞ்சம் பெற்ற சம்பவங்கள் எல்லாம் உண்டு. இப்போது, அத்தகைய இடமாறுதலை ரத்து செய்ய ஆசிரியர் பகவான் ஒரு வழியைக் காட்டியிருக்கிறார். மாணவர்களிடம் பாசமாகவும், பணியில் ஒழுக்கமாகவும் இருந்தால் போதும், மாணவர்களின் ஆதரவில் இத்தகைய இடமாறுதல்களை சரி செய்ய இயலும் என்பதுதான் அந்த வழி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories