December 5, 2025, 4:40 PM
27.9 C
Chennai

பகவானைத் தொடர்ந்து… ஆசிரியை இடமாறுதலுக்கு மாணவர்கள் போராட்டம்!

teacher bhagwan - 2025

அரக்கோணத்தில் ஆசிரியை இடமாறுதலை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஏற்கெனவே பகவான் என்ற ஆசிரியரின் இடமாறுதலுக்கு மாணவர்கள் போராட்டம் நடத்தி இது செய்தியாக ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அரக்கோணம் அருகே அரசு பள்ளி ஆசிரியை பணியிடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரக்கோணத்தை அடுத்துள்ள சேந்தமங்கலத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கே தமிழாசிரியராக பணியாற்றி வந்தவர் விஜயா. இவர் இதே பள்ளியில் 30 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார். இவர் மாணவர்களிடம் மிகவும் அன்பாகவும், இயல்பாகவும் நடந்து கொள்பவர் எனப்படுகிறது. இந்நிலையில் ஆசிரியர் விஜயாவுக்கு பள்ளிக் கல்வித் துறை பணியிட மாறுதலுக்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், தங்கள் தமிழ் ஆசிரியரை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது எனக் கோரி, பள்ளியின் முன்பு வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் நடுவில் திரண்ட மாணவர்கள், ஆசிரியர் பணியிட மாற்றத்தை ரத்து செய்யக் கோரி முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவர்கள், மற்றும் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கை குறித்து உரிய உயர் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து மாணவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு வகுப்புகளுக்குச் சென்றனர்.

bhagavan teacher - 2025

கடந்த காலங்களில், கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் முறைகேடான வகையில் பணம் சேர்க்க, இவ்வாறு ஆசிரியர்களை பணி இட மாறுதல் செய்து, அந்த இட மாறுதலை ரத்து செய்ய லஞ்சம் பெற்ற சம்பவங்கள் எல்லாம் உண்டு. இப்போது, அத்தகைய இடமாறுதலை ரத்து செய்ய ஆசிரியர் பகவான் ஒரு வழியைக் காட்டியிருக்கிறார். மாணவர்களிடம் பாசமாகவும், பணியில் ஒழுக்கமாகவும் இருந்தால் போதும், மாணவர்களின் ஆதரவில் இத்தகைய இடமாறுதல்களை சரி செய்ய இயலும் என்பதுதான் அந்த வழி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories