February 21, 2026, 3:14 AM
25.6 C
Chennai

குற்றாலம் சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து விபத்து 2 பேர் பலி

குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயது சிறுமி உள்பட 2 பேர் இறந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் தருவை இந்திராகாந்தி புதுக்காலனி பகுதியை சேர்ந்த கட்டிடத்தொழிலாளர்கள் 25 பேர் தங்களது குடும்பத்தினருடன் ஒரு வேனில் வெள்ளிக்கிழமை காலை குற்றாலத்திற்கு சுற்றுலா வந்தனர். தென்காசி-அம்பை பிரதான சாலை திரவியநகர் பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் இருந்த பாலமுருகன் மகள் ப்ரீத்தி பாலா (1). முருகன் மகன் முத்துசெல்வம் (25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் வேனில் இருந்த ராமச்சந்திரன் மகள் சுகன்யா (15), முருகேஸ் மகன் புவனேஸ் (13). முத்துசெல்வி (23, வான்மதி (19) பால்மாரி (10) ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீஸார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தருவையை சேர்ந்த வேன் டிரைவர் பால்மாரி என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Tamil News large 1850000 - 2026
இந்த விபத்திற்கு காரணம் டிரைவர் கண் அயர்ந்த நேரத்தில் சாலையின் இடது ஓரத்தில் சிறிய பள்ளம் ஒன்று இருந்துள்ளது , அதில் விட்டுவிடக்கூடாது என வலப்பக்கம் திருப்பியுள்ளார் ,அப்போது எதிரே சைக்கிளில் ஒருவர் வர அவர் மேல் மோதிவிடாமல் இருக்க திருப்ப இன்னொருவர் வர பதட்டத்தில் வண்டி அவரின் கட்டுகோப்பை இழந்துவிட வேன் கவிழ்ந்து உள்ளது , சுற்றுலா செல்லும் அனைவருக்கும் நாம் சொல்வதெல்லாம் ஒன்றுதான் டிரைவர்களுக்கு ஓய்வு கொடுங்கள் , டிரைவர்களுக்கு ஓர் வேண்டுகோள் வேனில் இருப்பவர்கள் சொல்கிறார் என ரன்னிங்கில் டிவிடி மாற்றுவது ,பென்டிரைவை மாற்றுவது போன்ற கவனக்குறைவான செயல்களை செய்யாதீர்கள் உங்களை நம்பி உங்கள் குடும்பம் மட்டுமல்ல உங்களை நம்பி உங்களோடு பயணிக்கும் பலரின் உயிரும் அவர்களின் குடும்பமும் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories