போலி சான்றிதழ் காட்டி 6 வருடமாக பேரிடர் பயிற்சி! அதிர்ச்சித் தகவல்!

Published:

coimbatore logeswari horz - 2026

சென்னை: போலி சான்றிதழ்களைக் காட்டி 6 ஆண்டுகளாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்தார் ஆறுமுகம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவையில் கல்லூரி ஒன்றில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது இரண்டாவது மாடியில் இருந்து பயிற்சியாளர் ஆறுமுகம் திடீரெனத் தள்ளி விட்டதில் கோவை கல்லூரி மாணவி லோகேஸ்வரி தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை இன்று காலை போலீசார் கைது செய்தனர். அஜாக்கிரதையாக செயல்படுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, கைது செய்யப்பட்ட ஆறுமுகத்திடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் என்ற சான்று போலி என கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி,போலி சான்றிதழ்களைக் காட்டி 6 ஆண்டுகளாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்துள்ளார் ஆறுமுகம்.

Related articles

Recent articles

spot_img