காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று மேட்டூர் அணை திறப்பு!

Mettur Dam water for Aadi Perukku - 2026

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 85-வதுஆண்டாக இன்று தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி டெல்டா பாசனத்தின் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழும் காவிரியின் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் அணையில் இருக்கும் தண்ணீரின் அளவைப் பொறுத்தும் அணைக்கான நீர் வரத்தைப் பொறுத்தும் அணை திறக்கப்படும் நாள் வேறுபடும்.

ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் அணை ஜனவரி 28-ஆம் தேதி மூடப்படும். இந்தக் கால கட்டத்தில் 320 டி.எம்.சி. தண்ணீரை பயன்படுத்தி சுமார் 16.50 லட்சம் ஏக்கரில் குறுவை,சம்பா, தாளடி என முப் போகம் பயிர்கள் விளைவிக்கப்படும்.

ஆனால் கடந்த 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு, மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் குறிப்பிட்ட காலத்தில் அணை திறக்கப்படவில்லை. நடப்பாண்டிலும் போதிய நீர் இருப்பு இல்லாததால் உரிய தேதியில் தண்ணீர் திறக்கப் படவில்லை.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும், நீர் இருப்பு 69 டி.எம்.சியாகவும் உயர்ந்துள்ளது. இந் நிலையில் இன்று காலை 10 மணி முதல் பாசனத்திற்காக அணை திறக்கப்பட்டுகிறது. மேட்டூர் அணையில் இருந்து 85-வது ஆண்டாக, டெல்டா பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்றும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, அணையின் மேல்மட்ட மதகுகளை இயக்கி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

முதல் கட்டமாக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த அளவு படிப்படியாக மாலை 6 மணிக்குள் 12 ஆயிரம் கன அடி வரை டெல்டா பாசனத்தின் தேவையைப் பொறுத்து அதிகரிக்கப்படும்.

மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து இதுவரை உரிய தேதியான ஜூன் 12-ஆம் தேதியன்று 15 முறையும், அதற்கு முன்னதாக 11 முறையும் தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

ஜூன் மாதத்திற்கு பிறகு நடப்பாண்டையும் சேர்த்து 59 முறை தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. மேட்டூர்அணை வரலாற்றில் தற்போது 85-வதுஆண்டாக டெல்டா  பாசனத்திற்காக அணை திறக்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் கல்லணையை அடுத்த மூன்று நாள்களில் சென்றடையும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறுவையை இழந்த சோகத்தில் இருந்த டெல்டா விவசாயிகள், இப்போது அணை திறக்கப்பட உள்ளதால் சம்பா சாகுபடிக்காக தங்களது நிலத்தை மகிழ்ச்சியுடன் தயார்படுத்தத் தொடங்கியுள்ளனர். சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு 130 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். ஆனால் தற்போது மேட்டூர் அணையில் 69 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

தமிழகத்திற்கு உரிய பங்கீட்டு அளவு நீரைத் தர கர்நாடகா முரண்டு பிடித்து வரும் நிலையில், எதிர் வரும் வடகிழக்குப் பருவ மழையை டெல்டா பாசன விவசாயிகள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

காவிரி டெல்டா பாசனத்துக்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் 6 கதவணை மின் நிலையங்கள் மூலம் 480 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணியும் தொடங்கப்பட உள்ளது.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories