திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணம்

ak bose - 2026

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக.,எம்எல்ஏ., ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 69.

கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவேல் மரணமடைந்ததால், இடைத் தேர்தல் வந்தது. அதில் ஏ.கே.போஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேற்று இரவு போஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை கைகொடுக்காமல் போஸ் மரணமடைந்தார்.

ஏ.கே. போஸ். எம்.ஜி.ஆர் காலத்து அதிமுக.,காரர். 2006, 2011 சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டுமுறை எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர். டிராவல்ஸ் நிறுவன அதிபரான ஏ.கே.போஸ், ஓர் அமைதியான அரசியல்வாதி. அடாவடிகளில் ஈடுபடாதவர் என்பதால் பலருக்கும் அவரைத் தெரியாது.

ஏ.கே.போஸின் தந்தை பெயர் கருப்பத்தேவர். ஏ.கே.போஸ் 2006ல் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார். 2007ல் சட்டசபையில் நடைபெற்ற அமளி துமளியில் தொப்பியை அவைத்தலைவர் மேஜை மீது வீசி பத்து நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் மூலம், ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தார். 2011ல் திருப்பரங்குன்றம் தொகுதி கூட்டணிக் கட்சியான தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டது. எனவே போஸ் தொகுதி மாறி மதுரை வடக்கில் போட்டியிட்டு வென்றார். 2016 சட்டசபைத் தேர்தலில் மீண்டும் வடக்குத் தொகுதியில் போட்டியிட மனு அளித்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து, திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அதில் வெற்றி பெற்றார்.

சட்டப் பேரவையில் அதிமுக., உறுப்பினர்கள் பிளவுபட்டு நின்றபோது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,வாக எண்ணும் படி, தேனியில் நடந்த திருமண விழாவில் தினகரனை சந்தித்து, அவருக்கு ஆதரவாகப் பேசினார். அதனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த போது, அதே நேரத்தில் நிகழ்ச்சியை முடித்து விட்டு மதுரை திரும்பி வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாரை ஒரு ஹோட்டலில் சந்தித்துப் பேசினா். பின் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்த போது, முதல்வர் எடப்பாடி தலைமையிலான அணியில்தான் இருக்கிறேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்போது திருப்பரங்குன்றம் தொகுதி இரண்டாவது முறையாக காலி ஆகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories