கருணாநிதியின் சமாதி… அண்ணா அறிவாலயத்தில் அமைய வேண்டும்: தொண்டர்கள் குரல்!

Published:

26 May29 DMK - 2026

சென்னை: மறைந்த திமுக., தலைவர் கருணாநிதியின் சமாதி எங்கு அமைய வேண்டும் என்பது குறித்து பலத்த விவாதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் மூப்பின் காரணத்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை காலமான திமுக., தலைவர் கருணாநிதியின் சமாதி எங்கே அமையவேண்டும் என்பது குறித்து தற்போது திமுக.,வினரிடம் பலத்த விவாதம் ஏற்படுள்ளது.

06 June24 DMK - 2026

மறைந்த திமுக., தலைவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதுதான் சரியானது என்று குடும்பத்தினரும் தலைவர்கள் சிலரும் கோரிக் கொண்டிருக்க, தமிழக அரசோ, வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மெரினாவில் இடம் ஒதுக்க இயலாது என்று கை விரித்தது. மேலும், சென்னை அடையாறு காமராஜர் நினைவு மண்டபம் அருகில் 2 ஏக்கர் பரப்பில் நினைவு மண்டபம் அமைக்க அரசு சார்பில் இடம் ஒதுக்கப் படும் என்று அறிவித்தது.

ஆனால் தொண்டர்கள் கோரிக்கையோ வேறு விதமாக உள்ளது. கருணாநிதி தன் மனம் ஒன்றி அதிக நேரம் இருந்ததும், காதலித்ததும் அண்ணா அறிவாலயம்தான். திமுக., தலைமையிடமான இங்கேதான் அவர் கட்சிப் பணி செய்துள்ளார். சென்னையின் மிக முக்கியமான இடத்தில் இருப்பதால், தொண்டர்கள் அதிகம் வருவார்கள். ஒரு கட்சியின் தலைவராக 50 ஆண்டுகள் இருந்த ஒரே தலைவராகத் திகழ்ந்தவர் நம் தலைவர் கருணாநிதி. எனவே அவரையும் கட்சியையும் பிரித்துப் பார்க்க முடியாது. உடல் நலம் குன்றியிருந்தபோதும், அவ்வப்போது தன் மனம் விரும்பிய கடிதமடல் எழுதும் போதும் அவர் விரும்பியது இந்த அறிவாலயம்தான்…

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

கருணாநிதிக்கு அறிவாலயத்தில் சமாதி நினைவிடம் அமைப்பதுதான் சரியானது… இதுவே உண்மைத் தொண்டனின் உள்ளக் குரல் என்று அதற்கு ஆதரவாக பல குரல்கள் சமூக ஊடகங்களில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.

உதாரணத்துக்கு ஒரு குரல்…

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img