தமிழக கேரள எல்லையில் போக்குவரத்து துண்டிப்பு: அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

 

puliyarai checkpost - 2026

தமிழக கேரளா எல்லையில் போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை வலுப் பெற்றுள்ளதால் கேரள மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த11 நாட்களாக பலத்த மழை விடாமல் எல்லைபகுதிகளில் பெய்து வருகிறது.

கடந்த 3 நாட்களாக தொடர்ந்து ஓய்வில்லாமல் விடிய..விடிய பெய்து வரும் கன மழையின் காரணமாக இரு மாநில எல்லைகளில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கேரளமாநிலத்திற்கு அத்தியாவசியபொருட்களான அரிசி, காய்கறிகள், பால், இறைச்சிக்காக ஆடுகள், கோழி முட்டை உள்ளிட்டவைகளும் சிமிண்ட், கட்டுமான பொருட்கள் மற்றும் மரத்தடிகள், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகள் மட்டுமின்றி கேஸ் சிலிண்டர்கள், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து பெற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்னர் தென்மலை, கழுதுருட்டி ஆகிய பகுதிகளில் மழையின் காரணமாக மண்சரிவு உருவானது. இதனைத் தொடர்ந்து அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை நிறுத்தி 10 டன் எடை கொண்ட வாகனங்களை மட்டுமே அனுமதித்து வந்த நிலையில் இன்று செங்கோட்டை கொல்லம் ரயில்பாதையில் நியூ ஆரியங்காவு,கழுதுருட்டி,தென்மலை ஆகிய பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அனைத்து ரயில்களும் இந்த தடத்தில் நேற்று முதல் நிறுத்தப்பட்டன.

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

இந்த நிலையில் நேற்று மாலையில் கேரளா மாநிலம் ஆரியங்காவு வனத்துறை அலுவலகம் முன்பு தொடங்கி பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாலையின் குறுக்கே சாய்ந்தும்,மழையினால் மண்சரிவு உருவானது

இதனை தொடர்ந்து இந்த தடத்தில் வாகனபோக்குவரத்தை நிறுத்தி சாலையை தற்காலிகமாக சீர்செய்து வாகனபோக்குவரத்தை அனுமதித்தனர். பின்னர் மண் சரிவுகள் குறித்து கொல்லம் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து கொல்லம் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு இன்று இரவு முதல் இந்த சாலையை தற்காலிகமாக மூட நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் அனுப்பியுள்ளது.

1992 ஆம் ஆண்டு உருவான சேதத்திற்குப் பின்னர் இப்போதுதான் இந்தப் பாதை மண்சரிவு காரணமாக மூடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டம் புளியரை காவல்துறை சோதனை சாவடியில் அனைத்து வாகனங்களையும் போலீசார் நிறுத்தி வைத்து உள்ளனர். இதன் காரணமாக சுமார் 2 கி.மீ தொலைவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories