மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் முன்னாள் நீதியரசர் ஹரி பரந்தாமன்

hariparanthaman - 2026

சென்னை: மாவோயிஸ்ட்கள் என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 5 பேர் கைது விவகாரத்தில், முன்னாள் நீதியரசர் ஹரி பரந்தாமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹரிபரந்தாமன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று மதியம் அளித்த பேட்டியில், “நகர மாவோயிஸ்டுகள்” என்று குற்றஞ்சாட்டி கைது செய்யப்பட்ட சுதாபரத்வாஜ், கவிஞர் வரவரராவ், வெர்னான் கான்சால்வ்ஸ், அருண் பரேரா மற்றும் கவுதம் நவ்லாகா ஆகிய 5 பேரும் உச்ச நீதிமன்ற தலையீட்டால் சிறையில் அடைக்கப் படாமல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வருகிற 6ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது. நீதிமன்றம் நியாயம் வழங்கும் என்ன நம்பிக்கை உள்ளது.

31.12.17 அன்று பீமாகோர்கான் என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக 8 மாதம் கழித்து ” உபா”சட்டத்தை பயன்படுத்தியுள்ளார்கள். இது ஒரு அரசியல் நடவடிக்கை, வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜனநாயக குரல் வளையை நெரிக்கும் ‘உபா’ சட்டத்தை திரும்பப்பெற நாடு முழுவதும் குரல் எழுந்துள்ளது. இந்த குரல் இன்னும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

தமிழ்நாட்டிலும் திருமுருகன் காந்தி, வழக்கறிஞர் முருகன் ஆகியோரை இச்சட்டத்தில் கைது செய்துள்ளனர். திருமுருகன் காந்தியை மாஜிஸ்திரேட் பிரகாஷ் சிறைக்கு அனுப்ப மறுத்துள்ளார். உடனே வேறு வழக்கை காட்டியுள்ளனர். அவர் மீது 40 வழக்குகள் போட்டு வைத்திருக்கிறார்கள். தூத்துக்குடியிலும் ஒரு எப்.ஐ.ஆரை 100 எப்.ஐ.ஆராக மாற்றி வைத்துள்ளார்கள்.

மக்களுக்காக பாடுபடும் சமூக ஆர்வலர்களை பாதுகாக்க நீதிமன்றங்கள் இயன்ற அளவுக்கு செயல்படுகின்றன.ஆனால் இப்பணியை ஊடகங்களும் மக்களாலும் மட்டுமே நிறைவாகச் செய்யமுடியும் என்றார் முன்னாள் நீதியரசர் ஹரி பரந்தாமன்.

சமூக விரோதிகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்திற்கு வெளியில் இவர்கள் இப்படி பேட்டி அளிப்பதும், செயல்படுவதும் சமூக ஆர்வலர்களிடையே ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் இரு சமூகங்களுக்கு இடையே திட்டமிட்ட வகையில் கொந்தளிப்பை ஏற்படுத்தி பெருமளவு கலவரம் ஏற்படக் காரணமானவர்கள் என்று, சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய போலீஸார் சுட்டிக் காட்டும் போது, நீதித்துறை சார்ந்தவர்கள் இது போன்ற பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறுவதும், ஆதரவாக பொது வெளியில் செயல்படுவதும் பொதுமக்களிடையே நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

வழக்கு நீதிமன்றத்துக்கு வரும் போது வழக்கின் தன்மைக்கு ஏற்ப முடிவு எடுப்பதை விட்டுவிட்டு, பத்திரிகையாளர்களை சந்தித்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீதிபதிகள் பேசுவது, இதே போன்ற வழக்கு இவர்கள் முன் வந்தால் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன், இது போல் ஆதரவாகப் பேசுபவர்களின் பின்னணியும் உள்நோக்கமும் கூட நன்றாக வெளித் தெரிந்து விடுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். குறிபாக, முன்னள் நீதிபதிகளின் இத்தகைய செயல்பாடுகள், இவர்கள் நீதிபதிகளாக இருந்த காலத்தில் எத்தகைய சார்புத் தன்மையுடன் தீர்ப்புகளை வழங்கியிருப்பார்கள் என்ற சந்தேகத்தையும் தூண்டுவதாக அமைந்துவிடுகிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories