December 5, 2025, 8:38 PM
26.7 C
Chennai

திருத்தப் பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டு: இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்!

smart card - 2025

சென்னை: திருத்தப்பட்ட ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டினை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ரேஷன் கார்டில் திருத்தங்கள் செய்த பின்னர், டூப்ளிகேட் எனப்படும் மாற்று கார்டுக்கு பதில், இணைய தளத்தில் ஆவணமாக பதிவிறக்கம் செய்யும் வசதியை உணவுத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் ஆதார் விவரங்கள் அடிப்படையில், தமிழகத்தில் கையடக்க வடிவில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. அதில் குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை செய்த பின், அரசு ‘இ – சேவை’ மையங்களில், மாற்று கார்டுகளை வாங்கிக் கொள்ளும் வசதி இருந்தது. இதற்கு 30 ரூபாய் கட்டணம்.

ஆனால், சேவை மைய ஊழியர்கள், கூடுதல் பணம் வசூல் செய்வது, தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் கார்டுகளை அச்சிட்டு தருவது என முறைகேடுகளில் ஈடுபட்டனர். இதனால் அந்த மையங்களில், மாற்று ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதை சில மாதங்களுக்கு முன் உணவுத்துறை நிறுத்தியது.

இந்நிலையில் ஸ்மார்ட் கார்டுகளில் பிழை திருத்தங்கள் செய்வோர், மாற்று கார்டுகளை வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறிபோது… பொது வினியோக திட்ட இணையதளம், ‘மொபைல் ஆப்’ செயலியில் கார்டுதாரர்கள், திருத்தங்கள் செய்யும் முன், பதிவு செய்த மொபைல் போன் எண்ணை குறிப்பிட வேண்டும். பின் அந்த எண்ணுக்கு அனுப்பப்படும் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவிட்டு, விரும்பிய திருத்தங்களை செய்யலாம்.

பின் அந்த விவரம், மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படும். அதை இணையதளம் வாயிலாகவே வட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையர் ஆய்வு செய்து ஒப்புதல் தருவர்.

தவறான விவரங்கள் இருந்தால் நிராகரிப்பர். அந்த விவரமும் எஸ்.எம்.எஸ்.,சில் அனுப்பப்படும். அதிகாரி ஒப்புதல் அளித்த ஒரு வாரத்திற்குள் சரி செய்த விவரங்கள் இணைய தளத்தில், பி.டி.எப்., ஆவண வடிவத்தில் இருக்கும். அதை, ‘பிரின்ட்’ எடுத்து, ரேஷன் கார்டு கேட்கும் இடங்களில் சமர்ப்பிக்கலாம்.

அரசு ஒப்புதல் கிடைத்ததும் ஏற்கெனவே இருந்தது போல் மாற்று கார்டுகள் வழங்கப்படும் என்று கூறினார். https://www.tnpds.gov.in/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories